Wednesday, 29 August 2012

கேரட்

கேரட்ஒரு குறிப்பிட்ட காய்கறி வகையை `தாவரத் தங்கம்' என்று அழைக்கிறார்கள். அது எது தெரியுமா? `கேரட்'தான். நம் மேனிக்கு தங்கம் போன்ற பளபளப்பைத் தருவதால்தான் கேரட்டுக்கு இப்பெயர். கேரட்டில் உள்ள `பீட்டா கரோட்டின்', நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் சிறப்புத் தன்மையையும் கொண்டிருக்கிறது.

மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம், இந்த பீட்டா கரோட்டினில் உள்ள சிறப்பு அணுக்கூறுகள், புற்றுநோய்க்கு எதிரியாகவும் செயல்படுகின்றன. இந்த பீட்டா கரோட்டினானது, வயிறு தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

ஐரோப்பா, வடக்கு ஆசியா, அபிசீனியா, வடக்கு ஆப்பிரிக்கா, காஷ்மீர் பகுதிகளில் காரட் விளைந்ததாக வரலாறு உள்ளது. இன்று உலகம் முழுவதும் முழுக்க எல்லா இடங்களிலும் காரட் விளைகிறது. கேரட் வேர் உள்ள கிழங்கு வகை யாகும். ஒரு அடி நீளம் உள்ள காரட்டுகளும் உண்டு. தில்லி காரட்டுகள் நன்றாகவும், சுவையாக வும் இருக்கும்.

கேரட் லேசான இனிப்பும், பசியைத் தூண்டுவதாகவும், நீர் இளக்கியாகவும் செயல் படும் தன்மையும் கொண்டது. பவுத்திரத்துக்கும், வயிற்றுக் கடுப்பு, வயிற்றில் பூச்சித் தொல்லை களுக்கும் மருத்துவ ரீதியான பலன்களைத் தந்து உதவுகிறது. இருமலைப் போக்கும். இதை மிக அதிகமாகத் தின்றால் பித்தமாகும்.

வைட்டமின் சி, வைட்டமின் டி, நியாசின், பைரிடாக்சின், ஃபோலிக் அமிலம், பயாடின், பென்டோதினிக் அமிலம் மற்றும் பொட்டாசியம், சோடியம், மக்னீசியம், தாமிரச்சத்துக்களும் காரட்டில் குறைந்த அளவு உள்ளன.

கேரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரி மானம் ஆகக் கூடியது. தினமும் கொஞ்சம் கேரட் சாப்பிட்டாலே ஒரு நாளைக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். உருளைக் கிழங்கை விட ஆறுமடங்கு கால்சியம் காரட்டில் உள்ளது. வளரும் குழந்தைகள் தினமும் காரட் சாறு குடித்தால் அது முழுமையான உணவாகும். கால்சியம் மற்றும் கரோட்டின் சத்துக்கள் நிறைய உள்ளன. கரோட்டீனை, கல்லீரல் வைட்டமின் ஏ-ஆக மாற்றிச் சேமித்துக் கொள்கிறது.

மருத்துவப் பயன்கள் :
கேரட்டை மென்று தின்றால் பற்கள் பலப்படும். வாய், ஈறு சுத்தமாகும், சிறிதளவு உப்பு சேர்த்து காரட் சீவலுடன் சாப்பிட்டால் எக்சீமா குணமாகும். கண்களின் நலத்தைக் காப்பதில் காரட்டிற்கு ஈடில்லை. டோகோகிளின் என்கிற ஹார்மோன் காரட்டில் உள்ளது. இன்சுலின் போன்றதான இது, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது.

அமெரிக்காவின் தேசியப் புற்றுநோய்க் கழகம், 1962 வாக்கில் தேசிய இதய, நுரையீரல், ரத்தக் கழகங்களுடன் இணைந்து நாடு தழுவிய மருத்துவப் பரிசோதனை இயக்கம் ஒன்றை நடத்தியது. 22,000 அமெரிக்கவாசிகளுக்கு கேரட்டுகளையும், பச்சைக் காய்கறிகளையும் கோடி ரூபாய்களை இதற்காக அமெரிக்க அரசாங்கம் செலவழித்தது.

மேலும், ரஷ்யாவைச் சேர்ந்த டாக்டர். மெட்சினிகோப் என்பவரது ஆய்வுப்படி, காரட்டுக்கு கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் உள்ளதாக மருத்துவ உலகம் அறிந்து கொண்டது. கேரட் கெட்ட பாக்டீரியாக்களை, குடல்களி லிருந்து அழித்து வெளியேற்றுகிறது. குடல் நோய்களிலிருந்து கேரட் சாறு காக்கிறது. குணமாக்குகிறது. குடல் புண்ணை ஆற்றுகிறது.

சிறுநீரகக் கோளாறுகளில், குறிப்பாக நெப்ரிடிஸ் கோளாறுகளின் போது கேரட் சாறு தரலாம். ஏனெனில் காரட் நல்ல நீரிளக்கி, சிறுநீர் சரியாகப் போகாதவர்களும் காரட் ஜுஸ் குடிக்க வேண்டும். உடலிலுள்ள தேவையற்ற யூரிக் அமிலத்தை கேரட் வெளியேற்றுவதால், மூட்டுவலி, கீல்வாத நோய்கள் குணமாக உதவுகிறது. பித்தப்பைக் கற்களைக் கரைப்பதுடன், கல்லீரல் கோளாறுகள், நெஞ்சக நோய்கள், சரியாகவும் ரத்தம் வெளியேறாத மாதவிலக்கு ஆகியவற்றுக்கும் காரட் உண்பது நோயை குணப்படுத்தும் சிறந்த வழியாகும். கேரட்டில் அதிகமாக வைட்டமின் ஈ உள்ளதாக ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

இந்த வைட்டமின் ஈ உடலுக்கும் மிகவும் நலம் பயக்கக்கூடியது என்று பிரபல சத்துணவு நிபுணர்கள் கருதுகிறார்கள். இது மலட்டுத் தன்மையைப் போக்க மிகவும் உதவுகிறதாம். புற்றுநோய் செல்களை ரத்தத்தில் உயிர்வாழாமல் செய்கிறது. இந்த வைட்டமின் ஈ, புற்றுநோய் வராமலும் காக்கிறது என்று விலங்குகளுக்கு அதிக அளவு உணவாகக் கேரட்டைக் கொடுத்து கண்டறிந்துள்ளார்கள். இது மனிதர்களுக்கும் பொருந்துகிறது என்றும் நிச்சயம் தினம் ஒரு கேரட், புற்றுநோயை அண்டவிடாது என்றும் இயற்கை மருத்துவ உலகம் உறுதிபடக் கூறுகிறது.


நீண்டகாலமாக `அல்சர்' உள்ளவர்கள், காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் கேரட்டை நன்கு பிழிந்து சாறு எடுத்து வாரம் மூன்று தடவை வீதம் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்கள் குணமடையும். மறுபடியும் அது போன்ற பாதிப்புகள் ஏற்படாமலும் தடுத்துவிடும்.

சிலருக்கு வாயில் எப்போதும் துர்நாற்றம் இருந்துகொண்டே இருக்கும். எத்தனை தடவை பல் துலக்கினாலும், வாய் கொப்புளித்தாலும் அந்தத் துர்நாற்றம் போகாது. அதற்குக் காரணம் வாயோ, பற்களோ அல்ல. வயிற்றில் இருக்கும் கோளாறுதான். வயிற்றுக் குறைபாட்டைச் சரிசெய்தால் வாய் துர்நாற்றம் அகன்றுவிடும்.

அதற்கு, வாரம் ஐந்து நாட்கள் மட்டும் கேரட் சாறை சர்க்கரை, உப்பு சேர்க்காமல் அருந்திவர வேண்டும். அப்புறம், வாய் துர்நாற்றம் போயே போய்விடும். வாரத்துக்கு இரண்டு நாட்களாவது கேரட்டை சமையலில் பயன்படுத்துவது உடம்புக்கு நல்லது.

காரணம், கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை அளிப்பதுடன், செரிமானத்தைத் தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது. கேரட்டை பச்சையாகவே சாப்பிடலாம் என்பது இதன் சிறப்பு. பற்களில் கறை உள்ளவர்கள் அடிக்கடி கேரட்டை பச்சையாக மென்று சாப்பிட்டால் அந்தக் கறை மறைந்துவிடும்.

No comments:

Post a Comment