
தினமும் 10 கறிவேப்பிலை இலைகளை பொடியாக அரிந்து மோர் சேர்த்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும். கொன்றை மரப்பட்டையின் கசாயம் 60 மில்லி தேன் 5 மில்லி கலந்து ஒரு நாளைக்கு இருவேளை சாப்பிட அதிக உடல் பருமன் குறையும். இரவில் ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட உடல் எடை குறையும். கொடம்புளியை சூப் செய்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட உடல் எடை குறையும்.
ஓரிதழ் தாமரையை முழுவதையும் காய வைத்து பொடி செய்து சாப்பிட தொப்பை குறையும். ஒரு கிண்ணம் நிறைய வாரம் மூன்றுமுறை நாவற்பழம் உண்டு வர உடல் எடை குறையும். 2 கை அளவு சிறுகீரை ஒரு கை அளவு பார்லி ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம், நான்கு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்து, அதிகாலையில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும். 100 கிராம் மணத்தக்காளிக் கீரையை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு எடுத்து, அதில் பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து, 2 சின்ன வெங்காயத்தை போட்டு சாறு எடுத்து காலை உணவுக்கு பிறகு சாப்பிட்டுவர உடல் எடை, பெருவயிறு குறையும்.
நச்சுக்கொட்டை கீரை சாறில் பாதி எலுமிச்சம் பழத்தை பிழிந்து குடித்தால் உடல் பருமன் குறையும். இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும். ஊற வைத்த அவலை காலையிலும், இரவிலும் சாப்பிட்டுவர உடல் எடை குறையும். தினமும் 300 கிராம் கருணைக் கிழங்கை மதிய உணவில் சமைத்து சாப்பிட உடல் எடை குறையும். நத்தைச் சூரியின் விதைகளை பொன் வறுவலாக வறுத்து தண்ணீர் விட்டு சுண்ட வைத்து வடிகட்டி 100 மில்லியளவு எடுத்து அத்துடன் 1 டம்ளர் பசும்பால் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர உடலில் எடை குறையும்.
பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றை சேர்த்து அவித்து, கடைந்து சாப்பிட்டால், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறையும். காசினிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டால் உடல் பருமன் குறையும். முறிகூடியன் இலையை சூப் செய்து குடித்து வர உடல் எடை குறையும். பருப்புக் கீரையுடன் பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு கரையும். இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், தொப்பை குறைந்து விடும்.
எலுமிச்சபழ சாற்றில் சர்க்கரைக்கு பதில் தேன் கலந்து பருகி வந்தால், உடல் இளைக்கும். 200 கிராம் நீர்முள்ளிச் சமூலம் நன்கு அலசி இடித்து, 2 லிட்டர் தண்ணீரில் போட்டுச் சோம்பு, நெருஞ்சில் விதை, தனியா வகைக்கு 50 கிராம் இடித்துப் போட்டு, அரை லிட்டராகக் காய்ச்சி 1 வேளைக்கு 125 மில்லி வீதம் தினம் 4 வேளை கொடுத்துவர பருத்த உடல் குறையும். நீர் முள்ளியை உலர்த்தி, எரித்துச் சாம்பலைக் கரைத்து வெயிலில் காய வைத்து உப்பு எடுக்க வேண்டும். 2-3 கிராம் உப்பை நீரில் கரைத்து காலை, மாலை கொடுக்க உடல் எடை குறையும். தினமும் கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சேர்த்து கஷாயம் செய்து அருந்த தொப்பை குறையும்.
பம்ப்ளிமாஸ் பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள உடல் பருமன் குறையும். கடுகு, மிளகு, திப்பிலி, செவ்வியம், சிற்றரத்தை, தூர்சிலை, உப்பு, அரிசி இவைகளை தூளாக்கிக் கொள்ளவும். அரிசியை வறுத்துத் தூள் செய்து, ஏற்கெனவே செய்துள்ள தூளுடன் சேர்த்துச் சாப்பிட்டுவர உடல் எடை குறையும். மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி குடித்துவர உடல் எடை குறையும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை பொடியாக்கி வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும். சுண்டைக்காய் இரும்பு சத்து மிகுந்தது. அதை அடிக்கடி சாப்பிட்டு வர உடல் பலம் பெறும். ஒரு தேக்கரண்டி அளவு புளியங்கொட்டை தூளை நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
ஓமத்தை கருக வறுத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர உடல் எடை குறையும். செம்பருத்தி பொடியை தேன் கலந்து தினமும் காலை, மாலை உணவுக்கு பின் சாப்பிட கொழுப்பு குறையும். கல்யாண முருங்கை பொடியை தினமும் காலையில் உணவுக்குப் பின் சாப்பிட உடல் எடை குறையும். கொழுப்பு தரும் பொருட்களைத் தவிர்த்து பூண்டு, வெங்காயம் இரண்டையும் காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர கொழுப்பு குறையும். துளசி இலை சாறை சூடாக்கி சிறிது தேன் கலந்து குடித்தால் உடல் பருமன் குறையும். புடலங்காயை அடிக்கடி சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்.
கரிசலாங்கண்ணி
கீரையைப் பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன்
குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. முருங்கை
இலைச் சாறு இரண்டு டீஸ்பூன் தினமும் காலை மாலை சாப்பிட உடல் எடை குறையும். அவரை இலையை உலர்த்தி இடித்துத் தூளாக்கி தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.சிறிதளவு
மோர் மற்றும் காரட் இவற்றை நன்றாக சேர்த்து அரைத்து தினமும் குடித்து
வந்தால் உடல் இளைக்கும். ஆவாரை
இலையை நிழலில் உலர்த்தி இடித்துத் தூளாக்கி துணியில் சலித்து ஒரு ஜாடியில்
போட்டு வைத்துக்கொண்டு தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் எடை குறையும்.
சிறிதளவு சோம்பு, கடுக்காய் தூள் சேர்த்து மண் சட்டியில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக காய்ச்சி வடிகட்டி அதனுடன் சுத்தமான சிறிதளவு தேன் கலந்து தினமும் 2 வேளை குடித்து வந்தால் உடல் எடைக் குறையும். சிறிதளவு இலந்தை இலைகளை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து மைய அரைத்து, அரிசி களைந்த நீரில் கலந்து கஞ்சி போல காய்ச்சி தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் மெலியும் .
சிறிதளவு
கொள்ளை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து அதை ரசம் வைத்து அதனுடன்
இந்துப்பு கலந்து தினமும் 3 வேளை குடித்து வந்தால் உடல் மெலியும் அதனுடன்
உடல் பலமும் கிடைக்கும். இரண்டு
தேக்கரண்டி தேனை ஒரு குவளை வெந்நீருடன் கலந்து தினமும் காலை உணவு
அருந்துவதுற்கு முன் பருகவும்.
No comments:
Post a Comment