Thursday, 23 August 2012

ரத்த தானம் பற்றிய சில உண்மைகள்

ரத்த தானம் பற்றிய சில உண்மைகள்ஆரோக்கியம் கொண்ட 18 முதல் 65 வயதுக்குட்பட்ட யார் வேண்டுமானாலும் ரத்த தானம் செய்யலாம்.

மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.

தானம் செய்த 24 மணி நேரத்தில் இருந்து 7 நாட்களுக்குள்ளாக நாம் கொடுத்தத்திற்கு ஈடான அளவு ரத்தம் நம் உடலில் ஊறிவிடும்.

ஒருவர் ரத்த தானம் செய்யும் போது அவர் உடலில் இருந்து 350 மி.லி. அளவுக்கு ரத்தம் எடுக்கப்படும். இது உடலின் மொத்த ரத்தத்தில் 7 சதவீதம் தான்.

ரத்த தானம் செய்தால் உடல் சோர்வு ஏற்படும் என்று கூறுவது தவறான தகவல்.

வாருங்கள் தொடர்ந்து ரத்த தானம் செய்வோம், உயிர்களைக் காப்போம்.

No comments:

Post a Comment