Monday, 22 June 2015

பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம்காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.

மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.

இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.

சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.

வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.

வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.

அறுசுவை

அறுசுவைகாரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும் கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

Tuesday, 26 May 2015

தேங்காய் பால்

தேங்காய் பால் உடலில் மாங்கனீசு குறைபாடு ஏற்பட்டால், நீரிழிவு நோய் வரும். ஆனால் தேங்காய் பாலில் வளமான அளவில் மாங்கனீசு நிறைந்துள்ளது. முழு தானியங்கள், அவரை மற்றும் பட்டாணிகள், நட்ஸ் போன்றவற்றிலும் அதிக அளவு மாங்கனீசு அடங்கியுள்ளது.சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்திருக்கும்உடலின் அநேக செயல்பாட்டிற்கு பயன்படும் முக்கிய உலோகமாக காப்பர் விளங்குகிறது. அதிலும் காப்பர் மற்றும் வைட்டமின் சி, சருமம் மற்றும் இரத்தக் குழாய்களை நெகிழ்வுத் தன்மையுடைன் மீள் திறனுடன் வைத்திருக்கும். இத்தகைய காப்பர் தேங்காய் பாலில் அதிகம் நிறைந்துள்ளது.

எலும்புகளை உறுதியாக வைக்க உதவி புரியும் தேங்காய் பாலில் போதுமான அளவு கால்சியம் இல்லாத போதிலும், பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. குறிப்பாக உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக்குவதற்கு பாஸ்பரஸ் முக்கிய ஊட்டச்சத்தாக விளங்குகிறது. அதிலும் பாஸ்பரஸை கால்சியத்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும் போது, உடலில் பாஸ்பேட் கலப்பதால், எலும்பு உருக்குதலை அது தடுக்கும்.

இரத்த சோகை ஏற்படுவதை தடுக்கும் போதுமான இரும்புச்சத்து உடம்பில் இல்லாததால், உலகத்தில் உள்ள பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது. இரும்புச் சத்து குறைபாடு இருப்பதால், உடலானது ஹீமோகுளோபின் அதிகரிப்பதை தடுத்து நிறுத்தும். இதனால் இரத்த அணுக்களில் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்காமல், இரத்த சோகையை உண்டாக்கும். ஒரு கப் தேங்காய் பாலில், உடம்புக்கு அன்றாடம் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25 சதவீதம் கிடைத்துவிடுகிறது.

தசைகளையும் நரம்புகளையும் ரிலாஸாகச் செய்யும் எப்போதெல்லாம் தசை பிடிப்பு மற்றும் தசை வலி ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் கொஞ்சம் உணவோடு சேர்த்து தேங்காய் பாலை பருகினால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இதில் அதிக அளவு மக்னீசியம் இருப்பதால், தசை வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. மேலும் ஒவ்வொரு நரம்பு அணுக்களுக்கும் வலித் தடுப்பானாக விளங்குவது மக்னீசியத்தின் முக்கியமான அம்சமாகும். உடலில் மக்னீசியம் இல்லையென்றால், கால்சியம் நரம்புகளை ஊக்குவிக்கும். அதனால் நரம்பு அணுக்கள் சுறுசுறுப்பாக செயல்படும். அளவுக்கு அதிகமாக நரம்பு அணுக்கள் சுறுசுறுப்பாக இருப்பதால், தசைகள் அளவுக்கு அதிகமாக சுருங்குவதற்கு காரணமாக விளங்குகிறது.

உடல் எடையை கட்டுப்படுத்த உதவும் உடல் எடையை குறைக்க முற்படுபவர்களுக்கு, கண்டிப்பாக இது ஒரு நல்ல செய்தியாக இருக்கும். தேங்காய் பால் வெகு விரைவிலேயே பசியை அடங்கச் செய்யும். அதற்கு காரணம் தேங்காய் பாலில் அடங்கியுள்ள அதிகப்படியான நார்ச்சத்து தான்.

கீல்வாதத்தின் இடர்பாட்டை குறைக்கும் செலினியம் என்பது ஒரு முக்கியமான ஆக்சிஜனேற்றத் தடுப்பான். இத்தகைய செலினியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது. ஆகவே கீல்வாதம் இருப்பவர்கள், இதனை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். குறைந்த அளவு செலினியம் இருப்பவர்களுக்கு, முடக்கு வாதம் ஏற்பட அதிகமான வாய்ப்புள்ளது.

இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த உதவும் இரத்தக் கொதிப்பை எண்ணி கவலைப்படுபவர்கள், பொட்டாசியம் கலந்த உணவை உண்டால், இந்த பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஏனெனில் பொட்டாசியம் உடம்பில் உள்ள இரத்தக் கொதிப்பின் அளவை குறைக்க உதவும். இத்தகைய பொட்டாசியம் தேங்காய் பாலில் அதிகம் உள்ளது.

உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பை நிலைநிறுத்த உதவும் தேங்காய் பால், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு ஆற்றலை உறுதியாக வைத்திருப்பதால், அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் இருமலை விரட்டியடிக்க உதவி புரியும். மேலும் இதில் வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வளப்படுத்தும்.

புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடம்பில் உள்ள புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஜிங்க் முக்கிய பங்கு வகிக்கிறது. இது புற்றுநோய் அணுக்களின் செயல்பாடுகளை குறைக்கும்

சுண்டைக்காய் வற்றல்

சுண்டைக்காய் வற்றல்சுண்டை வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயினால் உண்டாகும் கை கால் நடுக்கம், மயக்கம், உடற்சோர்வு, வயிற்றுப் பொருமல் முதலியவை நீங்கும்.சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம், மிளகு, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து சூப் செய்து அருந்தி வந்தால் கபக்கட்டு, ஈளை, இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, மூலத்தில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை நீங்கும்.

இரத்தத்தை சுத்தப்படுத்தி சிறுநீரைப் பெருக்கும். உடல் சோர்வை நீக்கும். தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் நீங்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும். ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு குறையும். பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.

சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள், மூலம் குணமாகும்.சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.

சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.

சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும். சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.

சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

எளிய வீட்டு வைத்தியம்

வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும்.

பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.

வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.

தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.

வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.

ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும்.

சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.

அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.

கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.

சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.

நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.

வெட்டி வேர்

வெட்டி வேர்வந்த முகப் பருக்களை விரட்டியடிப்பதிலும், பரு வராமலே தடுப்பது வெட்டிவேர்!

முகம் முழுக்க அடிக்கடி பருக்கள் தோன்றி அவதிப்படுகிறவர்களுக்கு, அருமருந்தாக திகழ்கிறது இந்த வெட்டிவேர் விழுது. சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் \ ஒரு டீஸ்பூன், கொட்டை நீக்கியகடுக்காய் & 1... இந்த இரண்டையும் முந்தின தின இரவே கொதிநீரில் ஊறவையுங்கள். மறுநாள் இதை அம்மியில் அரைத்து, அந்த விழுதை பருக்கள் மீது முழுவதுமாக மறைப்பதுபோல் தடவுங்கள்.ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படிச் செய்து வந்தாலே பருக்கள் உதிர்ந்து விடும். பருக்கள் இருந்த வடுவும் தெரியாது என்பதுதான் இந்த சிகிச்சையின் சிறப்பம்சம்!

பழைய பருக்கள் ஏற்படுத்திவிட்டுப் போன தழும்புகளால், சிலருக்கு முகம் கரடு முரடாக இருக்கும். அதற்கான நிவாரணம் ஒரு பிடி வெட்டிவேரை சிறு துண்டுகளாக்கி வெந்நீரில் போட்டு மூடுங்கள். ஒரு இரவு இது ஊறட்டும். மறுநாள் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விடுங்கள். முந்தின நாள் ஊறவைத்த வெட்டிவேரையும் தண்ணீரையும் தனியே பிரித்து வையுங்கள். இப்போது கொதிநீரில் வெட்டிவேரைப் போட்டு ஆவி பிடியுங்கள். அப்படியே முகத் தைத் துடைக்காமல், வெட்டிவேர் ஊறின தண்ணீரில் சுத்தமான வெள்ளைத் துணியை அமிழ்த்தி,பிழிந்துமுகத்தை ஒற்றி எடுங்கள். வாரம் இருமுறை இப்படிச் செய்து வந்தால், தழும்புகள் மறைந்துவிடும்.

சிலர் எப்போது பார்த்தாலும் வியர்வையில் குளித்திருப் பார்கள். அதனாலேயே பருக்களும் அதிகமாக இருக்கும். வெட்டி வேர், ரோஜா மொட்டு, மகிழம்பூ, செண்பகப்பூ, சம்பங்கி விதை... இவற்றை சம அளவு எடுத்து மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் (இவற்றை எவ்வளவுதான் அரைத்தாலும் திப்பி திப்பியாக இருக்கும். இதை நன்றாக சலித்து, நைஸான பவுடரை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்). இந்தப் பவுடரை தண்ணீரில் குழைத்து முகத்தில் பூசி, கழுவுங்கள்.

வெட்டிவேர் முகத்தில் உள்ள எண்ணெய்பசையை எடுத்துவிடும். சம்பங்கி விதை முகத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். சோர்வைப் போக்கி நிறத்தைக் கொடுக்கிறது ரோஜா மொட்டு. மகிழம்பூவும், செண்பகப்பூவும் வியர்வை நாற்றத்தைப் போக்கி வாசனையை கொடுக்கிறது. சிலருக்கு தோள்பட்டையிலும் முதுகுப் புறங்களிலும்பரு போன்ற சிறு கட்டிகள் இருக்கும். சில ஆண் களுக்கு உடலில் வரி வரியாக இருக்கும்.

இந்த இரு பிரச்னை களுக்குமான ஒரே தீர்வு வெட்டி வேரில் இருக்கிறது. பச்சைப் பயறு & 100 கிராம், சிறு துண்டுகளாக்கின வெட்டிவேர் & 50 கிராம்... இந்த இரண்டையும் சேர்த்து நன்றாக அரையுங்கள். இந்தப் பவுடரை உடலுக்குத் தேய்த்துக் குளியுங்கள். தினமும் இப்படி குளித்து வந்தாலே சிறுகட்டிகளும் வரிகளும் ஓடிப் போகும். சருமமும் மிருதுவாகும்.

அப்போதுதான் குளித்துவிட்டு உற்சாகமாக வந்தாலும் முகம் முழுக்க எண்ணெய் வழிந்து உங்களை டல்லாக்குகிறதா? வாரம் இருமுறை தலைக் குளியலுக்கு இந்த வெட்டிவேர் பவுடரை உபயோகியுங்கள். உடனடியாக வித்தியாசம் தெரியும். வெட்டிவேர் & 100 கிராம், வெந்தயம் & 100 கிராம்... இரண்டையும் சீயக்காய் மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்து குளிக்கும் போதெல்லாம் சீயக்காய்க்குப் பதில் இந்த பவுடரை பயன்படுத்துங்கள். தொடர்ந்து இதைச் செய்தாலே முகத்தில் எண்ணெய் வழியாது. 

சாறுகள்

சாறுகள்அருகம்புல் சாறு.: எல்லா நோய்களுக்கும் ஏற்ற டானிக் அருகம்புல் சாறு. புதியதாக குளுக்கோஸ் ஏற்றியது போலவும், உடலுக்கு புது ரத்தம் செலுத்தப்பட்டது போலவும் அதிக சக்தியை அளிக்கும். ரத்தத்தை சுத்தம் செய்து நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். மலச்சிக்களை தீர்க்கும். ஆண்மை, தாது விருத்தி, இருமல், வயிற்றுவலி, மூட்டுவலி, இதயக்கோளாறு, தோல் வியாதிகளை நீக்கும். ரத்ததில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும். வாய்துர்நாற்றம், பல் நோய்கள், சர்க்கரை நோய்கள் வராமல் தடுக்கும். ஆஸ்துமா ரத்த அழுத்தத்தை குறைக்கும். தாய்பாலை அதிகரிக்க செய்யும். உடலில் நச்சுத்தன்மையை அகற்றும். கொழுப்பு சத்தை குறைக்கும்.

துளசி இலைச்சாறு: காய்ச்சல், இருமல், ஜீரணக்கோளாறு, ஈரல் சம்பந்தமான நோய்கள் காதுவலி ஆகியவற்றறை நீக்கி ரத்தத்தை சுத்தம் செய்யும்.

தூதுவளை இலைச்சாறு: மார்புச் சளியை அகற்றும். நரம்புத் தளர்ச்சி மறையும். மூளை வளர்ச்சி நினைவாற்றல் அதிகரிக்கும். தோல் நோய்கள் மறையும்.

மஞ்சள் கரிசலாங்கண்ணி சாறு: உடல்நிறம் பொலிவு பெறும். கண்களுக்கு நல்ல பார்வை கிடைக்கும். மூளைக்கு சுறுசுறுப்பை தந்து, அறிவு தெளிவு ஏற்படும். காமாலை, மலச்சிக்கல் நீங்கும்.

பொண்ணாங்கண்ணி சாறு: உடலுக்கு வலிமை ஊட்டும். பொன் போல் உடல் பளபளப்பாகும். கண்ணொளி அதிகரிக்கும். வாதநோய்கள் மறையும். உடல்சூடு குறையும்.

வல்லாரை இலைச்சாறு: நினைவாற்றல் அதிகரிக்கும். நரம்பு தளர்ச்சி அகலும். வயிற்று நோய்கள், குடல் நோய்கள், நீங்கும். தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும் இதயம் வலுவாகும்.

வில்வ இலைச்சாறு: காய்ச்சல், நீரிழிவு குறையும். வயிற்று புண்கள் ஆறும். நல்ல பசி எடுக்கும். மந்த புத்தி மாறும். மஞ்சள் காமாலையை போக்கும்.. காலாரா குறையும்.

புதினா இலைச்சாறு: வாய் புண், வயிறு, குடலில் புண்கள், சளி, கபம், இருமல் குறையும். வெண்குஷ்டம் குறையும்.

நெல்லிக்காய் சாறு: தலைமுடி உதிர்வது குறையும். தும்மல், இருமல், சளி, கண்நோய், பல் நோய்கள், குறையும். நன்கு பசி எடுக்கும். இதயநோய்கள், நீரிழிவு நோய், தோல் நோய் குறையும். உடல் பலமடையும்

வாழைத்தண்டு சாறு: சிறுநீர் அடைப்பு, சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும். ரத்த அழுத்தம் தொந்தி, அமிலத்தனமை போன்றவற்றை குறைக்கும். உடல், கை, கால் வீக்கத்தை குறைக்கும். ரத்தம் சுத்தமாகும்.

கேரட் சாறு: கண் பார்வை ஒளி பெறும். கண் நோய்கள், பல் நோய்கள் குறையும். அமிலத்தன்மையை குறைக்கும்.

அரச இலைச்சாறு: மலச்சிக்கல், உடல்சூடு, கர்ப்பப்பை நோய்களை குறைக்கும். காம உணர்ச்சியை தூண்டச் செய்யும்.

கொத்தமல்லி சாறு: பசியை தூண்டும். பித்தம், வாத நோய், காய்ச்சல் குறையும். மூலம், சளி, இருமல் குறையும்.

Tuesday, 12 May 2015

Medipulse Hospital

E4, MIA, Basni II Phase, Opp AIIMS Campus, M.I.A. 1st Phase, Basni Jodhpur Rajasthan-342005

Saturday, 9 May 2015

Aaditya Fertility & Women Care Center

No. 393/1 Thiruvottriyur High Road, (near Thiruvotriyur Bus Depot) Chennai Tamilnadu-600019

Wednesday, 6 May 2015

S.V.Clinic

No. 108, Chinnia gounder street West Palladam, Coimbatore Tamilnadu-641664

Denvax Clinic

J-3, Sector 41 Noida Uttar Pradesh-201303

Tuesday, 5 May 2015

Chendur Diabetes Speciality Centre

No 72, 7th Avenue, Near Pillar Anjaneeyar Temple Chennai Tamilnadu-600083

Noida International University

Plot 1, Sector-17 A Gautam Budh Nagar Uttar Pradesh-201310

Thursday, 30 April 2015

PSRI Hospital

Press Enclave Marg New Delhi Delhi-110017

Wednesday, 29 April 2015

Shri Ram Hospital

No. 8, Pal Road,Opp. Hanuwant School, Pal Road Jodhpur Rajasthan-342001

Tuesday, 28 April 2015

Medifocus India Pvt Ltd

No 13/7, Vivekanadapuram 1st Street Chennai Tamilnadu-600033

Sree Sanjeevi Multispeciality Clinic Medical & Lab

No 81, Secratariate Colony, Agaram Main Road Chennai Tamilnadu-600073

Saturday, 25 April 2015

Hindustan Aeronautics Limited Aircraft Division

Aircraft Manufacturing Division Nasik, Ojhar Township P.O. Nashik Maharastra-422207

Green Apple Pharmacy

No: 303, 7-B Cross, Bannerghatta Road, BTM 2nd Stage Bangalore Karnataka-560076

Positive Homeopathy

Prakash Beedi Compound, Navbharat Circle Mangalore Karnataka-575003

Tuesday, 21 April 2015

Koncept Hospitals

Shop No. 291, Arcot Rd Chennai Tamilnadu-600024

Balaji Medical Centre

No. 4/18, Jagadeeswaran Street Chennai Tamilnadu-600017

Monday, 20 April 2015

Tarini Cancer Hospital & Research Institute

E.I.-2, M.I.A. (Old Delhi Road, Near Lohia Ka Tibara) Alwar Rajasthan-301030

Dr Suman Aggarwal

C/O Navjyoti Diagnostic Centre, Shop No-1, 1st Floor, Opposite G T B Hospital New Delhi Delhi-110093

மஞ்சள் காமாலை

மஞ்சள் காமாலைவைரஸ் கிருமியின் தாக்குதலால் ஏற்படுவது தான் மஞ்சள் காமாலை. இரத்தத்தில் பிலிரூபின் என்ற வேதிப்பொருள் அதிகரிப்பதால் ஏற்படும் நிலை தான் மஞ்சள் காமாலை. மஞ்சள் காமாலை வந்தால் கல்லீரல், மண்ணீரலோடு மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். ஈரல் பாதிப்பினால் வரும் மஞ்சள் காமாலை நோய்கள் பெரும்பாலும் ஹெபடைட்டிஸ் A வைரஸ் கிருமியினாலேயே வருகின்றன.இது பிறந்த குழந்தைக்கும்கூட வர வாய்ப்பு உள்ளது. இது சில தினங்களில், சில வகையான மருந்துகள் சாப்பிட்டாலே சரியாகிவிடும்.

அறிகுறிகள்
மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் மற்றும் உடல் மஞ்சளாக இருக்கும். சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சினை மற்றும் சிறுநீர் மஞ்சளாக வெளியேறும்.

மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல் கடுமையாக இருக்கும், அவர்களுக்குப் பசி எடுக்காது. இதனை ஆரம்பத்திலே மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

தவிர்க்க வேண்டியவை
மஞ்சள் காமாலை வந்தால் மசாலா வகைகள், கார உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதிக புரதம் உள்ள பருப்பு, சோயா வகைகளையும் விலக்கி வைக்க வேண்டும்.

சமையலில் அதிக எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. கொழுப்புத் சத்து நிறைந்த உணவுகளை ஒதுக்க வேண்டும். மஞ்சள் காமாலை வந்தால் 5 மாதங்கள் வரை அசைவ உணவுகளை தொடவேக் கூடாது. முட்டையில் மஞ்சள் கருவை தவிர்க்க வேண்டும்.

உடலுக்கு ஏற்றது
மஞ்சள் காமாலை வந்தவர்கள் மாவுச் சத்து நிறைந்த உணவுப் பொருட்களை அதிகம் உண்ண வேண்டும். முட்டையின் வெள்ளைக்கரு, மோர் ஆகியவற்றை உண்டால் உடலுக்கு சிறந்தது. மேலும் அவர்கள் தினமும் 3 இளநீர் குடிக்க வேண்டும். எளிதில் ஜீரணம் ஆகும் பொருட்களை உண்பது நல்லது.

சிலர் சூடு போடுவதால் இது சரியாகிவிடும் என்று நினைக்கிறார்கள். சூடு போட்டால் உடல் தான் புண் ஆகுமே தவிர சரியாகாது. ஆகவே சிந்தித்து செயல்பட்டு, உணவுக்கட்டுப்பாட்டுடன் இருங்கள், மஞ்சள் காமாலை பறந்து போய்விடும்.

சைனஸ்

சைனஸ்அக்னி வெயில் சுட்டெரிக்கும் இந்த டைம்ல `ஜலதோஷ' பிரச்சினை அதிகமாக வருகிறது. இதற்கு காற்றின் வழியாக பரவும் வைரஸ் தான் காரணம். மேலும் தவறான உணவு பழக்கம் காரணமாகவும் வைரஸ்கள் தொற்றி ஜலதோஷத்தை உண்டாக்குகிறது. இந்த ஜலதோஷம் முற்றி வரும் விளைவு தான் சைனஸ்.

பொதுவாக ஜலதோஷம் 3 நாளிலோ அல்லது அதிகபட்சம் 2 வாரத்திலோ குணமடைந்து விடும். அப்படி குணமாகவில்லை என்றால் அவர்களுக்கு சைனஸ் என்று தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அறிகுறிகள்
மூக்கின் முக்கிய பாகங்களாக இருப்பது சைனஸ் அறைகள். அப்போது ஜலதோஷத்தால் உருவாகும் சளி அந்த சைனஸ் அறைகளில் தங்கி கிருமிகலந்த சீழாகி மாறி விடுகிறது. அதனால் நன்றாக சுவாசிக்க முடியாது. தலை பாரமாக இருக்கும். சரியாக பேசவும் இயலாது. குனிந்தாலும், நிமிர்ந்தாலும் கூட `விண் விண்' என்று தலை வலிக்கும். லேசாக இருமினாலும் வலி ஏற்படும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். வாசனை தெரியாது. ருசியை உணர முடியாது.

மூக்கு எதற்கு அடைக்கிறது?
மூக்கில் உள்ள சைனஸ் அறைகள் அடைக்க பல காரணங்கள் உள்ளன. மூக்கின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர் சிலருக்கு சற்று வளைந்து இருக்கும். அந்த தடுப்புச் சுவர் நடுவில் இருந்தால் சைனஸ் அறைகளின் உள்ளே காற்று சென்று வருவதில் எந்த தடையும் இருக்காது.

மாறாக அது வளைந்து இருந்தால் அதன் அருகில் இருக்கும் சைனஸ் அறையின் வாசலை அது எப்போது வேண்டுமானாலும் அடைத்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சைனஸ் அறை வாசலில் உள்ள சதை வளர்ச்சி ஏற்பட்டாலும் அடைத்துக் கொள்ளும். மேலும் தூசுகள் நிரம்பிய இடங்களில் வேலை பார்த்தால் மூக்குக்குள் தூசுகள் சென்று ஜவ்வுகளைத் தாக்கி சளி தொந்தரவை ஏற்படுத்தி விடும்.

தடுக்கும் முறைகள்
கோடையில் 2 வகையாக சைனஸ் பிரச்சினையை உண்டாகும். ஒன்று திடீரென்று வந்து, அதிக வலியை தரும் சைனஸ். இதை நாசில்ஸ் ஸ்பிரே என்ற நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விடலாம். மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும்.

மற்றொன்று நிரந்தரமானது ஆனால் குறைவான வலியைத் தரும் சைனஸ். இதற்கு முதலில் என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்தி விட முடியாத நிலையில் வலியை மட்டுமே முடிந்தது. ஆனால் தற்போது `என்டோஸ்கோப்பிக்' சைனஸ் அறுவை சிகிச்சை முறையில் அதை குணப்படுத்த முடியும். இந்த சிகிச்சையில் மூடப்பட்ட சைனஸ் அறை கதவை திறந்து உள்ளே இருக்கும் சீழ் வெளியேற்றப்படுகிறது.

மேலும் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால் எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவதோடு அவற்றில் இருப்பது சளியா அல்லது சீழா என்பதையும் மிகத்துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சை எளிதாகி விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்

சைனஸ்

சைனஸ்அக்னி வெயில் சுட்டெரிக்கும் இந்த டைம்ல `ஜலதோஷ' பிரச்சினை அதிகமாக வருகிறது. இதற்கு காற்றின் வழியாக பரவும் வைரஸ் தான் காரணம். மேலும் தவறான உணவு பழக்கம் காரணமாகவும் வைரஸ்கள் தொற்றி ஜலதோஷத்தை உண்டாக்குகிறது. இந்த ஜலதோஷம் முற்றி வரும் விளைவு தான் சைனஸ்.

பொதுவாக ஜலதோஷம் 3 நாளிலோ அல்லது அதிகபட்சம் 2 வாரத்திலோ குணமடைந்து விடும். அப்படி குணமாகவில்லை என்றால் அவர்களுக்கு சைனஸ் என்று தெரிந்து கொள்ளலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அறிகுறிகள்
மூக்கின் முக்கிய பாகங்களாக இருப்பது சைனஸ் அறைகள். அப்போது ஜலதோஷத்தால் உருவாகும் சளி அந்த சைனஸ் அறைகளில் தங்கி கிருமிகலந்த சீழாகி மாறி விடுகிறது. அதனால் நன்றாக சுவாசிக்க முடியாது. தலை பாரமாக இருக்கும். சரியாக பேசவும் இயலாது. குனிந்தாலும், நிமிர்ந்தாலும் கூட `விண் விண்' என்று தலை வலிக்கும். லேசாக இருமினாலும் வலி ஏற்படும். மூக்கு அடிக்கடி அடைத்துக் கொள்ளும். வாசனை தெரியாது. ருசியை உணர முடியாது.

மூக்கு எதற்கு அடைக்கிறது?
மூக்கில் உள்ள சைனஸ் அறைகள் அடைக்க பல காரணங்கள் உள்ளன. மூக்கின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர் சிலருக்கு சற்று வளைந்து இருக்கும். அந்த தடுப்புச் சுவர் நடுவில் இருந்தால் சைனஸ் அறைகளின் உள்ளே காற்று சென்று வருவதில் எந்த தடையும் இருக்காது.

மாறாக அது வளைந்து இருந்தால் அதன் அருகில் இருக்கும் சைனஸ் அறையின் வாசலை அது எப்போது வேண்டுமானாலும் அடைத்து கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சைனஸ் அறை வாசலில் உள்ள சதை வளர்ச்சி ஏற்பட்டாலும் அடைத்துக் கொள்ளும். மேலும் தூசுகள் நிரம்பிய இடங்களில் வேலை பார்த்தால் மூக்குக்குள் தூசுகள் சென்று ஜவ்வுகளைத் தாக்கி சளி தொந்தரவை ஏற்படுத்தி விடும்.

தடுக்கும் முறைகள்
கோடையில் 2 வகையாக சைனஸ் பிரச்சினையை உண்டாகும். ஒன்று திடீரென்று வந்து, அதிக வலியை தரும் சைனஸ். இதை நாசில்ஸ் ஸ்பிரே என்ற நோய் எதிர்ப்பு மாத்திரைகளால் எளிதில் குணப்படுத்தி விடலாம். மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை வரை போக வேண்டியதிருக்கும்.

மற்றொன்று நிரந்தரமானது ஆனால் குறைவான வலியைத் தரும் சைனஸ். இதற்கு முதலில் என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்தி விட முடியாத நிலையில் வலியை மட்டுமே முடிந்தது. ஆனால் தற்போது `என்டோஸ்கோப்பிக்' சைனஸ் அறுவை சிகிச்சை முறையில் அதை குணப்படுத்த முடியும். இந்த சிகிச்சையில் மூடப்பட்ட சைனஸ் அறை கதவை திறந்து உள்ளே இருக்கும் சீழ் வெளியேற்றப்படுகிறது.

மேலும் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால் எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவதோடு அவற்றில் இருப்பது சளியா அல்லது சீழா என்பதையும் மிகத்துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சை எளிதாகி விட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம்

Friday, 17 April 2015

Neighbourhood Hospital Pvt Ltd

No. 9, Wilson Garden House Building Co Op Limited, Kothnur Main Road, 7th Phase Bangalore Karnataka-560078

Thursday, 16 April 2015

Anand Hospital

No 201, Kamarajar Salai, Near Manali Market Chennai Tamilnadu-600068

Wednesday, 15 April 2015

Mahendra-Gayatri Hospital

Mahendra-Gayatri Hospital, Nainital Road Bareilly Uttar Pradesh-243122

Darya Ram Hospital Pvt Ltd

Sonipat Ho, Opposite Sector 14, Durga Colony Sonepat Haryana-131001

Tuesday, 14 April 2015

தூக்க மாத்திரை

தூக்க மாத்திரைவேலை பார்க்கிற எல்லாருக்கும் இருக்குற பிரச்சனை-ல ஒன்னு தான் தூக்கமின்மை. சிலருக்கு வேலைப் பளு, ஆரோக்கியமில்லா லைப் ஸ்டைல்-னால தூக்கம் வரமாட்டிங்குது. அதனால சில பேர் தூக்க மாத்திரை சாப்பிடுறாங்க. தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரை சாப்பிடுறதால உடம்புக்குத் தான் கேடு வரும். அப்படி மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தூக்க மாத்திரை சாப்பிட்டா என்னென்ன ப்ராப்ளம் வருதுன்னு பாக்கலாமா!!!

தூக்க மாத்திரை ஒரு போதைப் பொருள் மாதிரி, அதை அடிக்கடி சாப்பிட்டா நாம அதுக்கு அடிமை ஆகிவிடுவோம். அப்புறம் நமக்கு நார்மலா தூக்கம் வந்தா கூட தூக்க மாத்திரை போடாம, நிம்மதியா தூங்க முடியாது, தூக்கமும் வராது.

தூக்க மாத்திரை சாப்பிட்டா நாம சுவாசிப்பதில் பிரச்சனை வரும். மேலும் ஆஸ்துமா, சுவாசக் கோளாறு பிரச்சனை இருக்குறவங்க தூக்க மாத்திரை சாப்பிட வேண்டாம்.

சிலர் தூக்க மாத்திரையை ஜூஸ் அல்லது ஆல்கஹாலில் கலந்து சாப்பிடுவாங்க. அப்படி சாப்பிட்டா உடலுக்கு மிகவும் ஆபத்தானது. மேலும் ஆல்கஹாலில் கலந்து சாப்பிட்டால், சில சமயங்களில் மரணம் கூட ஏற்படலாம். முக்கியமாக தூக்க மாத்திரையை திராட்சை பழ ஜூஸ் கூட சாப்பிட வேண்டாம்.

தூக்க மாத்திரை சாப்பிட்டா அடிக்கடி காலையில் தலைவலி, மயக்கம், சோர்வு, அதிக தாகம் போன்றவை ஏற்படும். தூக்கம் அதிகம் வருவதால், பசியைக் கூட மறந்து விடுவோம். இதனால் உடலில் உள்ள சக்தி குறைந்து, தலைச் சுற்றல், உடலில் நடுக்கம் போன்றவை ஏற்படும்.

ஆகவே தூக்க மாத்திரையை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடாதீங்க.

திராட்சைப் பழம்

திராட்சைப் பழம் திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இனிப்பு மற்றும் சுவைமிகுந்தது திராட்சை. கருப்பு, வயலட், பச்சை கலர்களில் கிடைக்கிறது. இதன் இனிப்பு உடனடியாக இரத்தத்தில் கலக்கும் சிறப்பை பெற்றது. நோயாளிகளுக்கு ஆரஞ்சுக்கு அடுத்தபடியாக திராட்சை அருமையான உணவு. திராட்சை பழத்தின் சத்துக்கள்: நீர் =85%, கொழுப்பு =7%, மாவுப்பொருள் =10%, புரதம் =0.8%, கால்சியம் =0.03%, பாஸ்பரஸ் =0.02%, இரும்புச்சத்து =0.04%, விட்டமின் A =15%, நியாசின் =0.3%

திராட்சைச்சாறு தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும். முகம் அழகு பெறும். மூலவியாதி, மூலச்சூடு குறையும். கண் பார்வைத் தெளிவடையும். குடல் புண் விலகும். இரத்தம் சுத்தமடையும். வயிற்றுவலி, வயிற்று உளைச்சல் சரியாகும். உடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் திராட்சைச் சாறு சாப்பிடுவது நல்லது. திராட்சைச் சாறு மட்டும் சாப்பிட்டுவர பல வியாதிகளைக் குணப்படுத்தும். இயற்கைச் சாறுகளில் திராட்சைச்சாறு மிகவும் அவசியமானது.

அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!".

இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.
ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.

திராட்சைப் பழரசத்தை சோடா, கோலாக்களுக்கு பதிலாக அருந்துவது அத்தனை ஆரோக்கியம்! தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது. ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸில் 80 சதவிகிதம் தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை "டயட்"டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக்கலாம்.

ரெஸ்வெரட்ரால் (Resveratrol)" எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் கிரேப் ஜூஸில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.

பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கிரேப் ஜூஸ் (Grape juice) கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது. ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமா இருங்க!

உலக விளைச்சலில் பாதி மதுவுக்கும், மீதி உணவுக்குமாக இது பயன்படுகிறது. இதிலுள்ள குளுக்கோஸ் விரைவில் ரத்தத்தை அடைந்து சக்தி தருகிறது.

எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

இளமையை மீட்டுத்தரும் திராட்சைப் பழம் - ப்ரிட்ஜில் வைத்த ஆப்பிள் போல முகம் பளிச் என்று இருக்க வேண்டுமா? திராட்சை சாப்பிடுங்கள் என்கின்றனர் என்று அறிவுறுத்துகின்றனர் அழகியல் நிபுணர்கள்.

திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் சிறந்த அழகு பொருளாக சருமத்திற்கு இளமை தரும் பொருளாக கருதப்படுகிறது. திராட்சை விதையில் உயர்தர பாலிஃபினால் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் காணப்படுகிறது. இது சருமத்தில் பாதிக்கப்பட்ட செல்களை உயிர்ப்பிக்கிறது. இதில் வைட்டமின் சி, இ, ஏ ( பீட்டா கரோட்டீன்) போன்றவை காணப்படுகின்றன. இது மூளையை சுறுசுறுப்பு ஆக்குவதோடு அனிச்சை செயலை உற்சாகப்படுத்துகிறது. கண், சருமம், மூளை ஆகியவற்றின் ஆரோக்கியத்தை தக்கவைக்கிறது. சருமம் விரைவில் முதுமை அடைவதை தடுக்கிறது.

தினசரி 50 கிராம் முதல் 200 கிராம் வரை திராட்சை சாப்பிடுபவர்கள் என்றும் இளமையுடன் இருப்பார்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

கருப்பு திராட்சை 25 கிராம் வாங்கி அதன் விதைகளை நீக்கி சாறு எடுத்துக் கொள்ளவும். முகத்தை நன்கு கழுவி துடைத்துவிட்டு பின் திராட்சை சாற்றை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊறவைத்து பின் நீர் கொண்டு கழுவி மென்மையான பருத்தி துண்டால் முகத்தை அழுத்தமின்றி துடைத்து வந்தால் முகம் பளிச்சென்று மாறும்.

திராட்சையில் உள்ள மாலிக் ஆசிட் சிறந்த ப்ளீச் போல செயல்படுகிறது. பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்குவதோடு பளிச் வெண்மையை தருகிறது. திராட்சைப் பழம் முகச்சுருக்கத்தைப் போக்கும். திராட்சைப் பழத்தை நன்கு அரைத்து கூல் போல மாற்றவும். இதன் முகம், கழுத்து பகுதிகளில் பூசி ஊறவைக்கவும். நன்கு உலரவிட்டு குளிர்ந்த நீரில் கழுவலாம். இதனால் முகம் புத்துணர்ச்சியாகும். சுருக்கம் ஏற்படாது

கழுத்து வலி

கழுத்து வலிகடுமையான கழுத்துவலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும்.. மனதளவில் இறுக்கமின்றி "ரிலாக்ஸாக" இருக்கவும்.

நேரான கோணத்தில் அமரவும். குறிப்பாக அலுவலகத்தில் மேஜைப்பணி புரியும் போது, கம்ப்யூட்டர் முன் அமரும் போது, படிக்கும்போது, படிக்கிற பக்கத்தை உங்கள் நேர் எதிரில் வைத்துக் கொள்ளவும்.

மேஜையில் அமர்ந்து பணி ஆற்றும்போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும். ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும்.

படுக்கும்போது கழுத்துக்குக் கீழே ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகள் அல்லது அதிக உயரமான தலையணை வைப்பதை தவிர்க்கவும். வயிறு தரையில் படும்படி குப்புறப்படுக்காதீர்கள். இந்த நிலை கழுத்தை முறுக்கி விடும்.

ஒரு குறிப்பிட்ட உயரத்தைப் பார்ப்பதில் தொடர்ச்சியாக, நெடுநேரம் ஈடுபடாதீர்கள். அதே போல் அதிக கனம் தூக்குவதில் அதிக நேரம் ஈடுபடாமல் இருக்கவும். நெடுநேரம் தொடரும் `டிரைவிங்'கைத் தவிர்க்கவும். அடிக்கடி ஓய்வுக்காக வண்டியை நிறுத்தவும்.

நாம் பழக்கத்தின் காரணமாகவே நம் கழுத்துக்களை தவறான முறைகளில் திருப்புகிறோம். இதனால் கழுத்துக்கு இடையூறே நம் தசைகள் உறுதியானவையாக இல்லை என்றாலோ நெகிழ்வுத் தன்மை குறைந்தவை என்றாலோ கழுத்துக்கு மேலும் தொந்தரவு வரும்.

கழுத்து உடற்பயிற்சி, கழுத்தின் மீது ஏற்படும் அழுத்தம் சமநிலை இன்மையைச் சீராக்கும். இயக்கத்தை அதிகரிக்கும், கழுத்தைப் பாதுகாக்கிற தசைகளை உறுதி பெறச் செய்யும்.எனினும் கழுத்துப் பயிற்சியில் மிதமிஞ்சி விடக்கூடாது. நிதானமாகவும், படிப்படியாகவும் பயிற்சி செய்யவும்.

Friday, 10 April 2015

Ganesh Gandhi Medicals

No.107, 108, Magadi Main Road Bangalore Karnataka-560023

Thursday, 9 April 2015

Tuesday, 7 April 2015

SRI SAI RAM HOSPITALS

No 6, Nr Metro, Yellechenahallli Post, Kanakapura Road Bangalore Karnataka-560062

Wednesday, 1 April 2015

Priya Media Solutions

Sri Basaveshwara Complex No- 20 B, Sy No 44/6,9th Main Bangalore Karnataka-560029

Thursday, 26 March 2015

Columbus Hospital

1-10-63/4, Chikoti Gardens, Begumpet Hyderabad - 500016 Telangana, India Hyderabad Andra Pradesh-500016

கறிவேப்பிலை

கறிவேப்பிலைபொதுவாக கறிவேப்பிலை உணவில் வாசனையை தர பயன்படுகிறது என்று தான் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் என்னவோ சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டுவிடுகிறோம். இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். ஏனென்றால் கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன. இதனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது.

இத்தகைய குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை குறித்து ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலைக்கு புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர். மேலும் இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்றும் கூறுகின்றனர். கருவேப்பிலை சாப்பிடுவதால் இதய நோய் வராது, மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் நன்மை உண்டா? என்று திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக்கழகத்தில் மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ. பாதித்து செல்களிலுள்ள புரோட்டின் அழிந்து, அதன் விளைவாக புற்றுநோய், வாதநோய்கள் வருகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

இது தவிர நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவு பாதியாக குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆமணக்கின் மருத்துவ குணங்கள்

ஆமணக்கின் மருத்துவ குணங்கள்ஆமணக்குச் செடியின் வேரை குடிநீரில் சேர்ப்பது வழக்கமாகும். அது போலவே, பல்வேறு விதமான தைலங்களிலும் இந்த வேரைச் சேர்ப்பார்கள். 

சளித் தொல்லை, ஜலதோஷம் நீங்கவும், காலை, மாலை இரு வேளைகளிலும் சிறிது அளவில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குக் கொடுத்து வர, சளித்தொல்லை குணமாகும்.

ஆமணக்கு இலை, விதை மற்றும் எண்ணெயின் மருத்துவ குணங்கள் இதன் இலைகளைச் சாறு பிழிந்து, கொடுத்து வந்தாலும் இந்த இலைகளை 

அரைத்து மார்பின் மீது கட்டி வந்தாலும் பால் சுரக்க ஆரம்பிக்கிறது. இலைகளை நறுக்கி, அதில் சிற்றாமணக்கு நெய் விட்டு வதங்கிச் சூட்டுடன் வலியுடன் கூடிய கீழ்வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒத்தடம் இடலாம்.

இதன் இலைகளை, கீழாநெல்லி இலைகளுடன் சேர்த்து அரைத்து சிறு எலுமிச்சம்பழ அளவில் எடுத்து மூன்று நாட்களுக்கு காலை நேரத்தில் தொடர்ந்து கொடுத்து வருவதுடன், நான்காவது நாள் மூன்று முறை சிறிதளவு சிவதைப் பொடி கொடுத்து வந்தால் காமாலை நோய் தீர்ந்துவிடும்.

சிற்றாமணக்கு எண்ணெய் அடி வயிற்றின் மீது பூசி, அதன் மேல் இந்த இலைகளை வதக்கிப் போட்டால் மலச்சிக்கல், வயிற்றுவலி குணம் பெறும். 

இதன் இலைகளைப் பொடியாய் அரைத்து, அதில் ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுப்பதால் மூலக்கடுப்பு, கீழ்வாதம், வாத வீக்கம் குணம்பெறும்.

ஆமணக்குச் செடியின் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கி தொப்புளில் வைத்துக்  கட்டினால் மூலம், வயிற்று வலி குணம்பெறும். சிறுநீர்ப்பை வலிகளுக்கு ஆமணக்கு இலைகள் உதவுகின்றன.

ஆமணக்கு விதைகளைப் பாலில் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து மூட்டுவலி, பின்தொடை, நரம்பு வலிகளுக்கு மருந்தாகத் தரலாம். சொட்டு, சொட்டாக சிறுநீர் கழியும் போக்கிற்கு சிவப்பு வகை ஆமணக்குச் செடியின் மலர்கள் பயன்படுகின்றன. மேலும், இதன் விதைகள் கல்லீரல் நோய்கள், மண்ணீரல் நோய்களையும் குணப்படுத்துகின்றது.

Wednesday, 25 March 2015

Maximus Medical Centre

No 49, Big Street, Near Police Station Chennai Tamilnadu-600117

Evident Dentel Health Care Clinic

No. 17/9, 3rd East Street, Kamaraj Nagar, Land Mark: Near Swarnam Hospital Chennai Tamilnadu-600041

Heart Line Health Care Services

No 6/11, Nachiappan Street, Mahalingapuram Chennai Tamilnadu-600034

Tuesday, 24 March 2015

Dr Sabherwal Dental & Orthodontic Centre

E-7, Ring Road, Lajpat Nagar 3, Back Side Of Moolchand Hospital New Delhi Delhi-110024

Niramay Hospital

No. 80 Feet Road, Near Natraj Theater Dhule Maharastra-424001

Thursday, 19 March 2015

Shri Jagannath Cancer Hospital

Khasra No. 455, NG 58 Ghaziabad Uttar Pradesh-201206

Wednesday, 18 March 2015

SIMS Pvt. Ltd.

Opp. Pinewood School Saharanpur Uttar Pradesh-247001

Tuesday, 17 March 2015

Hande Hospital (Dr Rajeev Durai)

No 44, Lakshmi Talkies Road, Near Pachaiyappas College & Lakshmi Theatre Chennai Tamilnadu-600030

Friday, 13 March 2015

வயிறு பிரச்சினையா?

நம் உடம்பில்வயிறு பிரச்சினையா? உள்ள கழிவுகள் வெளியேறினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பெரியவர்களுக்கு மலச்சிக்கல் என்றால் அதற்கேற்ப ஏதாவது மருந்து மாத்திரை சாப்பிட்டு அதை சரி செய்து விடுவோம். ஆனால் சின்னக்குழந்தைகளுக்கு மலச்சிக்கல் என்றால் எதையுமே சாப்பிடாது. உம் என்று ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருப்பார்கள். சமயத்தில் சில குழந்தைகள் வாந்தி கூட எடுப்பார்கள். அவர்களுக்கு சில பாட்டி வைத்திய முறைகளை செய்தால் சட்டென்று சரியாகிவிடும்.

 விளக்கெண்ணெய் வைத்தியம்
மலம் வெளியேராத குழந்தைகளுக்கு இளம் சூடான நீரை அடிக்கடி கொடுக்கவும் இதனால் வயிற்றில் மலம் இறுகிப் போயிருந்தாலும் இளக்கம் கொடுக்கும். விளக்கெண்ணையை எடுத்து வயிற்றில் சர்குலர் மூமெண்ட்டில் தடவி விடவும் ஆட்டோமேட்டிக் ஆக ஒரு ரிலீஃப் கிடைக்கும்.

சுக்கு டீ, காபி குடிக்கும் பிள்ளைக‌ளாக‌ இருந்தால் பாலில் காபி பொடி க‌ல‌ந்து சுக்கு சோம்பு த‌ண்ணீருட‌ன் க‌ல‌ந்து கொடுக்க‌வும்.

ஒரு தேக்க‌ர‌ண்டி சோம்பை க‌ருகாம‌ல் வ‌றுத்து அத்துட‌ன் சிறிது சுக்கு சேர்த்து ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் கொதிக்க‌வைத்து அரை ட‌ம்ள‌ராக‌ வ‌ற்ற‌விட்டு அதில் பால் க‌ல‌ந்து ச‌ர்க்க‌ரை சேர்த்து கொடுக்க‌வும்.

வயிற்றுச் சிக்கலை தீர்ப்பதில் இஞ்சிக்கு நிகர் எதுவுமில்லை. குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமல், மலச்சிக்கல் ஏதேனும் ஏற்பட்டால் இஞ்சி மிட்டாய் உண்ணத் தரலாம். இது வயிற்றுப் பிரச்சினையை சரியாக்கும்.

ஆலிவ் எலுமிச்சை
வாயில் உமிழ்நீர் சுரப்பது குறைந்து உலர்ந்து போனாலும் மலச்சிக்கல் ஏற்படும். எனவே எலுமிச்சையானது மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கக் கூடியது. எனவே பயணம் செல்லும் போது .கூட எலுமிச்சையை எடுத்துச் செல்லுங்கள். அவ்வப்போது நறுக்கி ஜூஸ் செய்து பருக தரலாம். இதனால் உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கும்.

மணிக்கட்டில் அழுத்தம்
இது அக்கு பிரசர் முறையோடு ஒத்தது. மலச்சிக்கல் பிரச்சினை உள்ள குழந்தைக்களின் மணிக்கட்டில் உள்பகுதியில் நன்றாக அழுத்தம் கொடுக்கவும். இதனால் வயிற்றில் இளக்கம் கொடுக்கும் சிக்கல் தீரும். ஒவராக பயணம் செய்தாலும் மலச்சிக்கல் ஏற்படும். எனவே நன்றாக ஓய்வெடுக்க விடவேண்டும். இதனால் குழந்தைகளின் மலச்சிக்கல் தீரும்.

ரசம் சாதம் கரைசல்
கெட்டியான உணவை தவிர்க்கவும். ரசம் சாதம் குழைவாக, பருப்பு கீரை கடைசல், வெள்ளை வாயு கஞ்சி போன்றவை கொடுத்தால் ரிலீஃப் ஆகும். அப்படியும் பிரச்சினை தீரவில்லை என்றால் அத்தி பழம் கொடுக்கலாம், சாப்பிடாத குழந்தைகளுக்கு அல்வா பதத்தில் கிளறி கொடுக்கவும். மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.

Thursday, 12 March 2015

Aster Healthcare Limited

Kuttisahib Road, Near Kothad Bridge, South Chittoor (P O) Cochin Kerala-682027

Wednesday, 11 March 2015

Dr Grace Superspeciality Homoeo Clinic

No. 1 9th Cross, Margosa Road Bangalore Karnataka-560003

Tuesday, 10 March 2015

Liss Dental And Health

No.1213, 22nd Cross, Sector 3, Opposite To Mahatma Ghandhi Statue Bangalore Karnataka-560102

Dr Mehta Multispeciality Hospitals

No 2, Mc Nichols Road 3rd Lane Chennai Tamilnadu-600031

Sunday, 8 March 2015

நந்தியா வட்டை

நந்தியா வட்டைநந்தியா வட்டை பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் வீட்டின் முன்பகுதியில் அதன் மருத்துவ குணம் தெரியாமல் பலரும் இதை வளர்த்து வருகின்றனர். பசுமையாய் கண்களுக்கு குளிர்ச்சியைத்தரும் இந்தச் செடி சுமார் 1.8 - 2.4 மீட்டர் உயரம் வளரும். இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. தோட்டங்களிலும், வேலியோரமாகவும் வளர்க்கப்படும் நந்தியா வட்டை பல்வேறு மருத்துவபயன்களை கொண்டுள்ளது. இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய் போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நந்தியார்வட்டைச் செடி இருவகைகளில் காணப்படுகின்றன. இருவகையும் பித்த சூட்டைக் குறைக்கும் தன்மையுடையவை. புண்களை சுத்தப்படுத்தி ஆற வைக்கும். பூக்களை இரவில் கண்களில் கட்டி, மறு நாள்காலை எடுத்து விடுதலின் கண்கள் குளிர்ச்சியடைகின்றன. பூக்களை சுத்தமான தண்ணீரில் இடித்து சாறு பிழிந்து கண்களில் விடுவதால் கண்நோய்கள் நீங்கி கண்பார்வையும் நன்றாக இருக்கும்.இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும். 

அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள், அதிக அளவில் காணப்படுகின்றன. சிட்ரிக், ஒலியிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு அமிலம். இலைகளின் பால் சாறு காயங்களின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும். கண்நோய்களிலும் உதவுகிறது. நந்தியா வட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். கண் நோய் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். வேர்ப்பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. வேர் கசப்பானது. பல்வலி போக்கும். வலிநீக்குவி, கட்டை குளுமை தருவது. வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும்.

நந்தியாவட்டப் பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் உறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டி வரப் பூ, சதைவளர்ச்சி, பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.

நந்தியா வட்டைப்பூவும் தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாகக் கசக்கிக் கண்களில் இரண்டொரு துளிகள் தொடர்ந்து விட்டுக் வந்தால் சில தினத்தில் கண்களில் காணும் பூ நீங்கும். மலர்களின் சாறு எண்ணெய் கலந்து பயன்படுத்தும் போது எரிச்சல் உணர்வை மட்டுப்படுத்தும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன்படுகின்றது. இது நிறத்திற்கும் பயன்படுகிறது. 

இதிலிருந்து அழியாத மை தயார் செய்கிறார்கள். இந்த பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் ஊறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டு வந்தால் பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.

ஐஸ்கிரீம்!!!

ஐஸ்கிரீம்!!!ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காத ஆட்களே இல்லை இருக்க மாட்டார்கள். ஆனால் பிடிக்கும் என்று அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கும். ஆகவே  கட்டுப்பாட்டோடு அதை சாப்பிட வேண்டும். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விடமாட்டார்கள். இதற்கு காரணம், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் பல் சொத்தையாகிவிடும் அல்லது சளி பிடிக்கும் என்பதால். நல்லது தான், ஆனால் ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.

1. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. எப்படியென்றால் ஐஸ்கிரீமை பால் கொண்டு செய்வதால் தான். இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைவதோடு, உடலுக்கு சக்தியையும் தருகிறது.

2. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் அது பற்களை பாதுகாப்பதுடன், ஈறுகளும் நன்கு வலுவடைகிறது.

3. சாக்லேட் ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் சிறந்தது. பொதுவாக சாக்லேட் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது. அதிலும் சாக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் சரியாகிவிடும்.

4. ஒரு கரண்டி ஐஸ்கிரீமில் வைட்டமின் ஏ, டி, கே மற்றும் பி12 ஆகியவை உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் பார்வைக் கோளாறு, சிறுநீரக கோளாறு போன்றவை சரியாகும். மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதிலுள்ள வைட்டமின் பி12 நினைவு ஆற்றலை அதிகப்படுத்தும்.

5. ஐஸ்கிரீமில் உடலுக்கு தேவையான புரோட்டீன் இருக்கிறது. இதனால் உடலுக்கு தினமும் தேவை, ஏனென்றால் உடலில் உள்ள தசைத் திசுவை தினமும் சரிசெய்ய தேவைப்படுகிறது.

6. சில ஐஸ்கிரீமானது கொழுப்பு குறைவாக உள்ள பாலாடையால் ஆனது. இப்படிப்பட்ட ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

ஆகவே ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று புரிந்து கொண்டீர்களா!!! ஐஸ்கிரீமை சாப்பிடலாம், ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். தினமும் சாப்பிட முடியவில்லை என்றாலும், வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங்கள். இதனால் உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.

ஐஸ்கிரீம்!!!

ஐஸ்கிரீம்!!!ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காத ஆட்களே இல்லை இருக்க மாட்டார்கள். ஆனால் பிடிக்கும் என்று அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கும். ஆகவே  கட்டுப்பாட்டோடு அதை சாப்பிட வேண்டும். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விடமாட்டார்கள். இதற்கு காரணம், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் பல் சொத்தையாகிவிடும் அல்லது சளி பிடிக்கும் என்பதால். நல்லது தான், ஆனால் ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.

1. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. எப்படியென்றால் ஐஸ்கிரீமை பால் கொண்டு செய்வதால் தான். இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைவதோடு, உடலுக்கு சக்தியையும் தருகிறது.

2. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் அது பற்களை பாதுகாப்பதுடன், ஈறுகளும் நன்கு வலுவடைகிறது.

3. சாக்லேட் ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் சிறந்தது. பொதுவாக சாக்லேட் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது. அதிலும் சாக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் சரியாகிவிடும்.

4. ஒரு கரண்டி ஐஸ்கிரீமில் வைட்டமின் ஏ, டி, கே மற்றும் பி12 ஆகியவை உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் பார்வைக் கோளாறு, சிறுநீரக கோளாறு போன்றவை சரியாகும். மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதிலுள்ள வைட்டமின் பி12 நினைவு ஆற்றலை அதிகப்படுத்தும்.

5. ஐஸ்கிரீமில் உடலுக்கு தேவையான புரோட்டீன் இருக்கிறது. இதனால் உடலுக்கு தினமும் தேவை, ஏனென்றால் உடலில் உள்ள தசைத் திசுவை தினமும் சரிசெய்ய தேவைப்படுகிறது.

6. சில ஐஸ்கிரீமானது கொழுப்பு குறைவாக உள்ள பாலாடையால் ஆனது. இப்படிப்பட்ட ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

ஆகவே ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று புரிந்து கொண்டீர்களா!!! ஐஸ்கிரீமை சாப்பிடலாம், ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். தினமும் சாப்பிட முடியவில்லை என்றாலும், வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங்கள். இதனால் உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.

Friday, 6 March 2015

Radiant Health Care Pvt Ltd

No.303, 7th B Cross, Kaveriappa Industrial Area, BTM Layout 2nd Stage Bangalore Karnataka-560076

Thursday, 26 February 2015

ஆலும் வேலும் பல்லுக்குறுதி!!! (2)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி!!! (2)ஆலமரத்தின் மொட்டுகளை எடுத்து அடிக்கடி நன்றாக மென்று வாயிலேயே அடக்கி வைத்து பிறகு துப்பினால் பல் வலி குறையும். சர்க்கரை வேம்பு இலைகளை கசாயம் போல செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி குறையும். சேஜ் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி மற்றும் பல் வலி குறையும். துவரை இலைகளை நசுக்கிச் சிறிதளவு பல் வலி உள்ள இடத்தில் இரவில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். துத்திக்கீரையுடன் சிறிது படிகாரம் சேர்த்து அரைத்து, தண்ணீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் பல்வலி, பல் ஈறுகளில் உண்டாகும் இரத்தம் கசிவு, ஈறு அரிப்பு போன்றவை குறையும். புதினா இலைகளை காயவைத்து பொடியாக்கி, உப்புத்தூள் கலந்து பல் தேய்த்து வந்தால் பற்கள் உறுதி பெறும். பல் நோய்கள் குறையும்.

நுணாக்காயையும், உப்பையும் சம அளவு எடுத்து அரைத்து அடை தட்டி உலர வைத்து அரைத்து பல் துலக்கி வந்தால் பல் நோய்களை தடுக்கலாம். பிரிஞ்சி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும். வெட்பாலை இலைகளை வாயில் போட்டு மென்று வந்தால் பல்வலி குறையும். ரோஸ்மேரி இலையின்பொடியினால் பல் துலக்கி வர பல் ஈறுகளில் வலி குறையும். மகிழங்காயை மென்று துப்ப பல்லாட்டம் நீங்கி பல் உறுதிப்படும்.

பல்வலி வந்தால் ஒரு பூண்டை உரித்து, மணிக்கட்டில் நாடித்துடிப்பு இருக்கும் இடத்தில் வைத்துக் கட்ட வேண்டும். இடது பக்கம் பல்லில் வலி இருந்தால் வலது புற மணிக்கட்டிலும், வலது பக்கம் பல்லில் வலி இருந்தால் இடது மணிக்கட்டிலும் கட்டுப் போட பல்வலி சிறிது குறையும். சுக்காங்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும். ஆவாரை இலைப் பொடியைப் புதினா இலைப் பொடியுடன் கலந்து பல் துலக்கி வந்தால் பல் வலி குறைந்து ஈறு உறுதி பெறும்.

அக்கரகாரத்தை தனியாக இடித்தெடுத்து சூரணம் செய்து பற்பொடி யாக‌  உபயோகித்து வர‌ பற்களைக் கெடுத்து வரும் புழுக்கள் சாகும், பற்சொத்தையை  தடுக்கலாம். சமஅளவு மஞ்சள் இலை மற்றும் புதினா இலைகளை எடுத்து இரண்டையும் உலர வைத்துப் பொடியாக்கி,உப்புத் தூள் சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் வராமல் தடுக்கலாம். பொடுதலை இலையை அரைத்து நெறிக்கட்டிய இடத்தில் வைத்துக்கட்ட நெறிக்கட்டு மறையும். கண்டங்கத்திரி வேரை நிழலில் உலர்த்தி அதனுடன் காயவைத்த புதினா இலைகளைச் சேர்த்து நன்கு பொடியாக்கி அதைக்கொண்டு தினமும் பல் துலக்க பல்வலி, பல் ஈறு நோய்கள் குணமாகும்.

ஒரு வெங்காயத்தை எடுத்து பொடி பொடியாக அரிந்து  அதை வலி உள்ள பல்லில் வைத்து வாயை இறுக்கமாக மூடி கொள்ளவும். சிறிது நேரத்தில் வலி குறையும். ஒருநாள் விட்டு ஒருநாள் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம் பழம் சாப்பிட்டுவர பல்வலி வராமல் தடுக்கலாம். பற்களைத் தூய்மையாக்கி, பளிச்சிட வைப்பதில் துளசிக்கு பெரும் பங்கு உண்டு. சம்பா கோதுமையை வறுத்து அரைத்த பவுடர் ஒரு கப், துளசி பவுடர் கால் கப், சர்க்கரை கால் கப், பொடித்த பச்சைக் கற்பூரம் 10 கிராம். இவற்றை  சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இந்த பவுடரால் தினமும் பல் தேய்த்து வர, பல் கூச்சம், வாய் துர்நாற்றம், ஈறு வீக்கம் போன்றவை நீங்கி பற்கள் பளபளக்கும்.

30 கிராம் அக்கரகாரம் வேர்ப் பொடியை 1 லிட்டர் நீர்விட்டு 250 மி.லி ஆகும் வரைக் காய்ச்சி வடிகட்டி நாள்தோறும் 3 வேளை வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும். 100 கண்டங்கத்தரிப் பழத்தைக் கறுகி போகாமல் வதக்கி  வேக விடவும் பாகல் இலை சாறு பிழிந்து அந்த சாற்றிலேயே கண்டங்கத்தரிப் பழத்தை அரைத்து வைத்த விழுதை 500 மி லி நல்லெண்ணெயில் கலக்கி 3 நாட்கள் வெயிலில் காய வைத்து  இந்த தைலத்தை பஞ்சில் நனைத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் பல் வலி குறையும். லவங்கம், கற்பூரம், ஓமம் ஆகியவற்றைத் தனித்தனியே பொடி செய்து கொள்ளவும். அவற்றில் ஒரு சிட்டிகை எடுத்து வீங்கிய பல் ஈறில் வைத்து அழுத்த வேண்டும். அதனை விழுங்காமல் உமிழ்ந்துக் கொண்டே இருக்கவேண்டும். பிறகு சுடுநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் ஈறுகளில் உள்ள வீக்கம் குறையும்.

நான்கு கைப்பிடி வேப்பிலை, ஒரு பிடி உப்பு ஆகியவற்றை ஒரு சட்டியில் போட்டு கருக்கித் தூள் செய்து பற்பொடியாக பயன்படுத்தினால் பல் ஈறு உபாதை குறையும். துளசிஇலை, உப்பு இவற்றை நன்றாக கசக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி குறையும். மிளகு, சர்க்கரை இரண்டையும் நன்றாக அரைத்து வலியுள்ள இடத்தில் வைத்தால் பல்வலி குறையும். உப்பை வறுத்து அதை இளஞ்சூடாக வலியுள்ள இடத்திற்கு வெளியே வைத்து ஒத்தடம் கொடுத்துவர பல்வலி குறையும்.

இரண்டு கிராம்பை நன்றாகத் தட்டி வலி உள்ள பல்லுக்கு மேலும் பக்கத்திலும் இருக்கும்படி வைத்து வாயை மூடிக் கொண்டால் பல் வலி குறையும். கண்டங்கத்திரி பழத்தை எடுத்து வெயிலில் நன்கு உலர்த்திய பின் நெருப்பில் போட்டு அந்த புகை வாயில் புகும்படி புகைப்பிடித்தால் பல் வலி குறையும். காட்டாமணக்கு செடியின் இளங்குச்சியால் பல் துல‌க்கி வர பல் வலி குறையும். மாசிக்காயை துளாக்கி  நீரில் காய்ச்சி வாய் கொப்பளித்தால் ஈறு பலமடையும்.

பூச்சி இலை, மிளகு, உப்பு இவைகளை நன்கு அரைத்து வலியுள்ள இடத்தில் வைக்க பல் வலி குறையும். தான்றிக் காய்த்தோலைக் நீரிலிட்டு வாய் கொப்பளித்து  வந்தால் பல் வலி குறையும். வாகை மரப்பட்டையை எரித்துக் கரியாக்கிப் பொடி   செய்து பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும். புங்க மர இலையை காய்ச்சி அந்த நீரை கொண்டு அடிக்கடி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். துத்தி இலை, வேர் இவற்றை காய்ச்சி  அந்த நீரை அடிக்கடி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். அடிக்கடி மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் பற்கள் உறுதியாகும்.

செவ்வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் பல்வலி வராமல் தடுக்கலாம். பிரமத்தண்டு இலை, பூ, காய் இவற்றை காய வைத்து பொடி செய்து உப்பு சேர்த்து தினமும் பல்துலக்கி வர  பல்வலி குறையும். சிவனார் வேம்பின் வேரை வைத்து தினமும் பல் துலக்கி வர பல்வலி குறையும். புளி, உப்பு எடுத்துக் கசக்கி பல்வலி உள்ள இடத்தில் தினமும் வைக்க பல்வலி குறையும். உப்பு, எலுமிச்சைச் சாறு, பெருங்காயம் மூன்றையும் கலந்து  தினமும் பல் துலக்கி வர பல் வலி குறையும்.

புளியங்கொட்டை தோல் பொடி, கருவேலம் பட்டை பொடி, உப்பு கலந்து பல்  துலக்கி வர பல்வலி குறையும். புதினாவைக் காயவைத்து பொடி செய்து தேன் கலந்து தினமும் சாப்பிட பற்கள் வலுவடையும். தினமும் ஆப்பிளை மென்று சாப்பிட்டு வர பற்கள் வலுவடையும். கொய்யா இலையை பொடித்து பல் துலக்கினால் பல்வலி குறையும். ஆலம் விழுதினை கொண்டு தினமும் பல் துலக்கி வர பல் வலி குணமாகும். ஒரு கரண்டி மிளகுடன் 2 கரண்டி சர்க்கரையைச் சேர்த்து நன்றாக அரைத்து பல் வலியுள்ள இடத்தில் வைத்தால் வலி தீரும்.

துவர்ப்பாக்கு, நெல்லிக்காய் வற்றல், கிராம்பு இவற்றை பொடி செய்து தினமும் பல் துலக்கி வர  பல் வலி குறையும். கருவேலம்பட்டை, ஆலம் விழுது, தென்னங்குரும்பை ஆகியவற்றை பொடி செய்து தினமும் பல் துலக்கி வர பற்கள உறுதியாக இருக்கும். கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர ஈறுவீக்கம் குணமாகும். கருவேலப்பட்டையை காய வைத்து  பொடியாக்கி தினமும் காலையில் பல் துலக்கி வந்தால் பல் வலி குணமாகும். புதினா இலையை காயவைத்து சம அளவு உப்பு சேர்த்து தூளாக்கி காலை, மாலை பல்துலக்கி வந்தால்  பல் கூச்சம் குறையும்.

கோவைப் பழம் அடிக்கடி சாப்பிட பல்வலி குணமாகும். மகிழம் மரத்தின் பட்டையை பொடியக்கி பல் துலக்கினால் பல்வலி குணமாகும். படிகாரத்தையும், கடுக்காயையும் பொடி செய்து நீரில் கலந்து தினமும் வாய் கொப்பளித்து வர குணமாகும். சிறிதளவு வெங்காயத்தை எடுத்து  பொடிப் பொடியாக நறுக்கி வலிக்கின்ற இடத்தில் வைத்தால் நீங்கிவிடும். சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும். கடுகை அரைத்து பொடி செய்து பல்வலி இருக்கும்  இடத்தில் பற்றுப் போட்டால் விரைவில் பல் வலி குணமாகும்.

லவங்கத் தைலத்தை பஞ்சில் நனைத்து வலி இருக்குமிடத்தில் வைத்தால் வலி குறைவதோடு இதமாகவும் இருக்கும். ஒரு நாளைக்கு மூன்று முறையாவது இந்த வைத்தியத்தை செய்ய வேண்டும். பெருங்காயப் பொடியை  வறுத்து வலி எடுக்கும் சொத்தைப் பல்குழியில் வைத்து கடித்துக் கொண்டால் வலி நொடியில் பறந்துவிடும். புங்கம் பட்டையை இடித்து தூளாக்கி கடுக்காய் தூள் சேர்த்து  நல்லெண்ணெயில் காய்ச்சி அதை பல் மேல் தடவினால் பல் வலி தீரும்.

கரும்பை மாதம் ஒரு முறையாவது கடித்துச் சாப்பிடவும். மாவிலையை நன்கு பொடி செய்து காலை மாலை இரு வேளையும் பல் துலக்கவும். கரிசலாங்கண்ணி கீரையை துவரம் செய்து தினமும் மதிய உணவுடன் உண்ணவும். ஒரு சிறு துண்டு சுக்கை வாயில் போட்டு நன்றாக மெல்லவும்.

Wednesday, 25 February 2015

Samvaad Speech and Language Rehabilitation Centre

No.80, 1st Cross, 5th Main,2nd Stage, Behind Barbeque Nation Bangalore Karnataka-560071

Seven Seas BPO Services Pvt. Ltd.

Kalabhavan Road, Nr. Town Hall, Ernakulam North Ernakulam Kerala-682018

Tuesday, 24 February 2015

Rahyals Med India Pvt Ltd.

No.99, 2nd floor, Lakshmanaswami Salai Chennai Tamilnadu-600078

Hi Tech Diagnostic Centre

No 13, Dr Nair Road, Opp To More Super Market Chennai Tamilnadu-600017

Bitulmal Hasanapuram

No. 9 Samsath Complex, I St Main Road, Thirumalai Nagar Hastinapuram Chennai Tamilnadu-600044

Monday, 23 February 2015

Mahavir Vaatsalya Aspatal

Mainpura, Near Sadaquat Ashram / LCT Ghat Patna Bihar-800001

R K AHUJA

R-103/1 model Twn Delhi 110009, Nil, Model Town 3 Delhi Delhi-110009

Friday, 20 February 2015

ஆலும் வேலும் பல்லுக்குறுதி!!! (1)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி!!! (1)ஆலமரப்பட்டையை மைபோல் இடித்து பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை வெந்நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனுடன் சர்க்கரை சேர்த்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பல் நோய்கள் குறையும். கருவேலம் பட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து அதில் 30 கிராம் எடுத்து அதனுடன் 6 கிராம் கிராம்பு, மென்தால் சேர்த்து உரலில் போட்டு இடித்து சல்லடையில் சலித்து வைத்துக் கொண்டு காலை, மாலை பல் துலக்கி வந்தால் பல்வலி குறையும். கருவேலம் மரப்பட்டைகள் எடுத்து எரித்து சாம்பலாக்கி நன்கு ஆற வைத்து அதில் சிறிது கடுகு எண்ணெய், உப்பு சேர்த்து பாதிக்கப்பட்ட பற்களை தேய்த்து வந்தால் பல் வலி, பல்லில் சீழ் வடிதல் குறையும்.

பல் வலி ஏற்படும் போது சிறிது மிளகுத்தூளில் கிராம்பு எண்ணெய் கலந்து வலி இருக்கும் பல்லில் தடவி வந்தால் வலி குறையும். முந்திரி மரத்தின் தளிர் இலைகளை பறித்து நன்றாக கடித்து சாப்பிட்டு வந்தால் பல் வலி குறையும். பூந்தி கொட்டை, உப்பு சேர்த்து வறுத்து பொடி செய்து பல்பொடியுடன் சேர்த்து பல் தேய்த்து வந்தால் பல் நோய்கள் குறையும். பல் வலி ஏற்படும் போது பற்களின் மீது தேனை தடவி விட்டு உமிழ்நீர் பெருகி வாயிலிருந்து வெளியேற செய்து வந்தால் பல் வலி குறையும். பல்லில் ஓட்டை அல்லது புழு வெட்டு இருந்தால் தேனை பல்லில் படும்படி நிரப்பி வாய் கொப்பளித்து வந்தால் கிருமிகள் குறையும்.

இஞ்சியை தோல் நீக்கி  இடித்து சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து வாய் கொப்பளித்து குடித்து வந்தால் சொத்தைப்பல் குறையும். கடுகு எண்ணெய் எடுத்து சிறிது உப்பு சேர்த்து வெளிப்புறமாக தாடைகளில் தடவி நன்கு தேய்த்து வந்தால் பல் வலி குறையும். தாடைகள் மற்றும் பல் ஈறுகள் பலம் பெறும். கொள்ளுக்காய் வேளை செடி வேரை கஷாயம் செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி குறையும். 6 கிராம்பு மற்றும் வேப்ப மரப்பட்டைகளை நீரிலிட்டு நன்றாக காய்ச்சி ஆற வைத்து இந்த நீரை வாயில் சிறிது நேரம் வைத்து பிறகு கொப்பளித்து வந்தால் பல் வலி குறையும்.

மகிழம்காயை எடுத்து  நன்றாக மென்று  அதை வாயில் அடக்கி வைத்திருந்தால் பல்ஆட்டம் குறைந்து பல் உறுதிபடும். பனங்கிழங்கை குப்பைமேனிச்சாற்றில் அரைத்து நல்லெண்ணெய் யில் காய்ச்சி பல்வலி உள்ள பாகத்தில் துளி துளியாய் விட்டு வர பல்வலி குறையும். 10 கிராம் வால் மிளகு, 8 கிராம் இந்துப்பு ஆகிய இரண்டையும் எடுத்து நன்றாக இடித்து சலித்து அந்த பொடியை தினமும் பல் தேய்ப்பதற்கு பயன்படுத்தி வந்தால் பல் வலி மற்றும் பல் அசைவு குறையும். மகிழம் இலைகளை எடுத்து கஷாயம் செய்து அதை வைத்து வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி போன்ற பல் சம்பந்தமான நோய்கள் குறையும்.

நந்தியாவட்டை வேரை  சுத்தம் செய்து அதை  வாயில் போட்டு மென்று துப்பி வந்தால் பல்வலி குறையும். நீர்முள்ளி விதை, வசம்பு ஆகியவற்றை போட்டு தண்ணீர் விட்டு  எட்டில் ஒரு பங்காக சுண்டக் காய்ச்சி காலை, மாலை என இரு வேளை மூன்று நாட்கள் வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி, பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் ஆட்டம் ஆகியவைகள் குறையும். வேப்பிலைகளை எடுத்து இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து காலையில் எடுத்து வெயிலில் உலர்த்தி தூளாக்கி இதனுடன் சிறிது உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல் நோய்கள் குறையும். தான்றிக்காயை நன்றாக சுட்டு அதன் மேல் தோலை எடுத்து நன்கு பொடி செய்து சர்க்கரை கலந்து காலையில் வெந்நீருடன் சாப்பிட்டு வர பல் வலி மற்றும் பல் ஈறுகளில் வலி ஆகியவை குறையும்.

புளியங்கொட்டை தோல், கருவேலம் பட்டை, உப்பு ஆகியவற்றை கலந்து இடித்து தூள் செய்து பல் துலக்கி வந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் குறையும். பிரம்மதண்டு இலைகளை எடுத்து நன்கு எரித்து சாம்பலாக்கவும். பின்பு அந்த சாம்பலை எடுத்து தினமும் பல் தேய்த்து வந்தால் பல்லில் சீழ் வடிதல் குறையும். மிளகுத் தூளும், உப்பும் கலந்து பற்பொடி செய்து பல்துலக்கி வர பல் வலி, பல் கூச்சம் குறையும். பச்சை நன்னாரி வேரைக் வெந்நீர் விட்டு அரைத்து கொட்டைப்பாக் களவு எடுத்து  3 தடவை காலை, மதியம், மாலை என்று பல்லில் இரத்தம் நிற்கும் வரையில் கொடுக்க வேண்டும்.

இரவில் படுக்கப் போகும் முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் கிருமிகள் குறையும். தோல்  நீக்கிய சுக்கை எடுத்து கொள்ளவும். வெட்டுப்பாக்கை இடித்து  நன்றாக வறுத்து கொள்ளவும். உப்பு  நீங்கலாக அனைத்தையும் இடித்து சலித்து  பிறகு உப்பை கலந்து கொள்ளவும். 3 மணி நேரம் வெயிலில் வைக்கவும். பின் இந்த பொடியை வைத்து பல் துலக்கி வர பல் வலி, பல் பலவீனம் குறையும்.

கருங்காலி மரத்திலிருந்து உருவாகும் ஒரு வகை பிசினை பல்பொடி போல் உபயோகிக்க பற்கள் உறுதி மற்றும் பற்கள் வெண்மையாகும். வாயுவிளங்கா வேர்பட்டையினை தூள் செய்து பல் துல‌க்கி வர பல்வலி குறையும். நாயுருவி வேர்  100 கிராம்,கடுக்காய் 50 கிராம்,நெல்லிக்காய் 50 கிராம். தான்றிக்காய் 50 கிராம்,ஏல அரிசி 20 கிராம் கிராம்பு 50 கிராம் சுக்கு 50 கிராம் கருவேலப்பட்டை 50கிராம் இந்துப்பு 50 கிராம் இவ‌ற்றை உலர வைத்து தூசி, கொட்டை நீக்கி பொடி செய்து மெல்லிய துணியில் சலித்து தினமும் இரு முறை பல் துலக்கி வர பற்கள் பளபளவென மின்னும்.

நாகலிங்கம் இலைகளை மென்று சாப்பிட பல் மற்றும் ஈறு இடைவெளியில் தங்கியுள்ள கிருமிகள் வெளியேறும் பல்வலி, பற்கள் சொத்தையாகாமல் தடுக்கும். துளசி இலையை சாறு எடுத்து சிறிதளவு கற்பூரம் கலந்து பல் வலியுள்ள இடத்தில் பூசி வர பல் வலி குறையும். கரிசாலையை செடியைக் காய வைத்துப் பொடியாக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்கள் வெண்மையாகும்.
கருவேலமரபட்டை, வாதுமைக் கொட்டைத் தோலும் சமனளவு கருக்கிப் பொடித்துப் பல் தேய்த்து வரப் பல் ஈறுகளில் புண்,பல் கூச்சல் போன்றவை குறையும். சிறிது படிகாரத்தை தூள் செய்து  தேனில்  குழைத்து  ஈறில் பூசி வர பல் ஈறுகளில் உள்ள புண் குறையும்.

கொட்டை நீக்கிய பேரீச்சம் பழத்தை நீரில் நான்கு மணி நேரம் ஊற வைத்து பிறகு  கடித்துச் சாப்பிட்டால்  பற்கள் பலம் பெறும்.
ஆலமரத்து பட்டையை பொடி செய்து வெந்நீரில் கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து 3 மாதம் சாப்பிட்டு வர பல் நோய்கள் குறையும். பல் ஆட்டம், ஈறுகளின் தேய்மானம் தீரும். பல் கூச்சம், வாய் நாற்றம் விலகும். துத்தி இலைக் கஷாயத்தால் வாய் கொப்பளிக்க‌ பல் ஈறுகளில் உண்டாகும் வலி குறையும். காட்டாமணக்கு இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறு பலம் பெறும். பப்பாளி செடியின் பாலை பல் வலி உள்ள இடத்தில் தடவி வந்தால் பல்வலி குறையும்.

அஜ்மோதக இலைகளை மென்று வந்தால் பற்கள் உறுதி பெறும். தாளிசப்பத்திரி இலைகளை உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து அந்த பொடியால் பல் துலக்கி வந்தால் பல் வலி குறையும். கரியால் இலைகளை பல் வலியின்  போது மென்றால் பல் வலி குறையும். கருவேல் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறு பலம் பெறும். சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய்த்தூள், இந்துப்பு சமஅளவாக எடுத்து பொடி செய்து பல்பொடியாக பயன்படுத்த பல் ஆட்டம், பல் சொத்தை குறையும்.

Thursday, 19 February 2015

Ayur Sparsh

No. 57/A, Sai Lotus, Near Andra Spice Hotel, Opp. RNSIT, Channasandr Bangalore Karnataka-560061

Tuesday, 17 February 2015

Zota Pharmaceuticals Pvt. Ltd.

New No. 560/Old No. 562, Shop No. 8G, Century Plaza, Anna Salai, Land Mark: Near Sterling Towers Chennai Tamilnadu-600018

Monday, 16 February 2015

Wellness Q.E.D

C-188, Devli Road New Delhi Delhi-110062

Friday, 13 February 2015

Kurinji Hospital (a unit of Vangal Amman Health Service Ltd.

No.522/3, Near Nava India Signal, Behind EB Station, Sowripalayam Post Coimbatore Tamilnadu-641028

Nextel Pharma Pvt. Ltd.

No.57, Nanjappa Layout, Kanakapura Road Bangalore Karnataka-560078

Saint Morgan Pharmaceutical

No.14, 4th Cross, Bikasipura Road Bangalore Karnataka-560062

Health Benefits of Cinnamon

Health Benefits of CinnamonCinnamon is one of the world's oldest known spices. The tree is native to Sri Lanka where it was found thousands of years ago. It is the best spice available in terms of its nutrition and health. It contains unique healthy and healing property comes from the active components in the essential oils found in its bark. Cinnamon has extremely high anti-oxidant activity due to which it has numerous health benefits. Aside from being used as a medicine by other cultures since ancient times, the health benefits may also come from eating it which can be listed as follows:

Lowers Cholesterol:
Studies have shown that just 1/2 teaspoon of cinnamon included in a daily diet can lower cholesterol. Also Cinnamon may significantly lower LDL "bad" cholesterol, and triglycerides (fatty acids in the blood) and total cholesterol.

Reduces blood sugar levels and treating Type 2 Diabetes:
Several studies have shown improved insulin sensitivity and blood glucose control by taking as little as ½ teaspoon of cinnamon per day. Improving insulin resistance can help in weight control as well as decreasing the risk for heart disease.

Heart Disease:
Cinnamon strengthens the cardiovascular system thereby shielding the body from heart related disorders. It is believed that the calcium and fiber present in cinnamon provides protection against heart diseases.
Including a little cinnamon in the food helps those suffering from coronary artery disease and high blood pressure.

Fights Cancer :
A study released by researchers at the U.S. Department of Agriculture in Maryland showed that cinnamon reduced the proliferation of leukemia and lymphoma cancer cells.
Besides, the combination of calcium and fiber found in Cinnamon can help to remove bile, which prevents damage to colon cells, thus prevents colon cancer.

Tooth decay and mouth freshener:
Cinnamon has traditionally been used to treat toothache and fight bad breath. Small pieces of cinnamon can be chewed, or gargled with cinnamon water which serves as a good mouth freshener

Cures Respiratory Problems:
Cinnamon is very useful home remedy for common or severe colds. A person suffering should take one tablespoon of honey with 1/4 teaspoon cinnamon powder daily for 3 days. This process will cure most chronic cough, cold and clear the sinuses.
Cinnamon also found to cure flu, influenza, sore throat and congestion.

Brain Tonic:
Cinnamon boosts the activity of the brain and hence acts as a good brain tonic. It helps in removing nervous tension and memory loss. Also, studies have shown that smelling cinnamon may boost cognitive function, memory, performance of certain tasks and increases one's alertness and concentration.

Infections:
Due to its antifungal, antibacterial, antiviral, anti-parasitic and antiseptic properties, it is effective on external as well as internal infections. Cinnamon has been found to be effective in fighting vaginal yeast infections, oral yeast infections, stomach ulcers and head lice.

Eases menstruation cycles:
Cinnamon has also been found useful for women's health as it helps in providing relief from menstrual cramping and other feminine discomforts.

Birth Control:
Cinnamon also helps in natural birth control. Regular consumption of cinnamon after child birth delays menstruation and thus helps in avoiding conception.

Breastfeeding:  It is also believed that cinnamon aids in the secretion of breast milk.

Reduces Arthritis Pain:
Cinnamon spice contains anti-inflammatory compounds which can be useful in reducing pain and inflammation associated with arthritis. A study conducted at Copenhagen University, where patients were given half a teaspoon of cinnamon powder combined with one tablespoon of honey every morning had significant relief in arthritis pain after one week and could walk without pain within one month

Digestive Tonic:
Cinnamon should be added to most recipes. Apart from adding flavor to the food, it also aids in digestion. Cinnamon is very effective for indigestion, nausea, vomiting, upset stomach, diarrhea and flatulence. It is very helpful in removing gas from the stomach and intestines. It also removes acidity, diarrhea and morning sickness. It is often referred to as a digestive tonic.

Reduces Urinary tract infections:
People who eat cinnamon on a regular basis report a lower incidence of urinary tract infections. Cinnamon is diuretic in nature and helps in secretion and discharge of urine.

Anti clotting Actions:
A compound found in Cinnamon called as cinnamaldehyde has been well-researched for its effects on blood platelets. [Platelets are constituents of blood that are meant to clump together under emergency circumstances (like physical injury) as a way to stop bleeding, but under normal circumstances, they can make the blood flow inadequate if they clump together too much]. The cinnamaldehyde in cinnamon helps prevent unwanted clumping of blood platelets.

Natural Food Preserver: When added to food, it prevents bacterial growth and food spoilage, making it a natural food preservative.

Headaches and migraine: Headache due to the exposure to cold wind is readily cured by applying a thin paste of powdered cinnamon mixed in water on the temples & forehead.

Pimples and Blackheads: Cinnamon helps in removing blood impurities. Therefore it is often recommended for pimples.
Also external application of paste of cinnamon powder with a few drops of fresh lemon juice over pimples & black heads would give beneficial result.

Thinning of the blood and improves blood circulation:
Cinnamon is a blood thinning agent which also acts to increase circulation. This blood circulation helps significantly in removing pain. Good blood circulation also ensures oxygen supply to the body cells leading to higher metabolic activity. You significantly reduce the chance of getting a heart attack by regularly consuming cinnamon.

Toning of tissues: Considerable anecdotal evidence exists to suggest that cinnamon may have the ability to tone and constrict tissues in the body.

Muscle and joint pain relief: Those who eat cinnamon on a regular basis often report that their muscle and joint pain, as well as stiffness, is reduced or even eliminated.

Immune System: Honey and cinnamon paste is good for boosting the immune system, removing regular fatigue and increasing the longevity of an individual. It is also known to have anti-aging properties.

Itching: Paste of honey and cinnamon is often used to treat insect bites. It is a great source of manganese, fiber, iron, and calcium.

Healing: Cinnamon helps in stopping bleeding. Therefore it facilitates the healing process. Indeed, cinnamon has several health benefits as highlighted above that can be used to improve one's health and boost one's immune system. This is a great reason to keep some cinnamon around. Sprinkle it in your tea or coffee, over oatmeal or a sweet potato and, this will do wonders to your health.