நீண்ட நேரம் தூங்கினால் நீரிழிவு நோய் குறையும்
லண்டன், அக்டோபர்-1
நீண்ட நேரம் தூங்கினால் நீரிழிவு நோய் குறையும். தற்போது நீரிழிவு நோய் இளைஞர்களையும் தாக்குகிறது. எனவே, அந்த நோய் தாக்காமல் தடுக்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, பிட்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் இளைஞர்களிடம் நூதன ஆய்வு மேற்கொண்டனர். அதில், நீண்ட நேரம் தூங்குபவர்களை எதிர்காலத்தில் நீரிழிவு நோய் தாக்காது என கண்டறிந்துள்ளனர். ஏனெனில், அவர்களது உடலில் அதிக அளவில் இன்சுலின் சுரப்பது, கட்டுப் படுத்தப்படுவது தெரிய வந்தது.
பொதுவாக இரவு நேரங்களில் இளைஞர்கள் 6 மணி நேரம் தூங்குகின்றனர். அதே நேரத்தில் அவர்கள் கூடுதலாக ஒரு மணி நேரம் தூங்கினால் போதும். அதன் மூலம் இன்சுலின் சுரக்கும் அளவு 9 சதவீதம் தடுக்கப்படுவதாக ஆய்வு குழுவின் தலைவர் கரீன் மேத்யூஸ் தெரிவித்தார். 245 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சராசரியாக நாள் ஒன்றுக்கு 6.4 மணிநேரம் தூங்க வைத்தும், அதற்கு குறைவான நேரம் உறங்க வைத்தும் ஆராய்ச்சி செய்யப்பட்டது.
அதில், குறைவான நேரம் தூங்கியவர்களுக்கு நீரிழிவு நோயை ஏற்படுத்தும் இன்சுலின் அதிக அளவு சுரந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, நீண்ட நேரம் தூங்குபவர்கள் எதிர் காலத்தில் நீரிழிவு நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
நன்றி
மாலைமலர்
01-அக்டோபர்-12
No comments:
Post a Comment