Thursday, 26 March 2015

Columbus Hospital

1-10-63/4, Chikoti Gardens, Begumpet Hyderabad - 500016 Telangana, India Hyderabad Andra Pradesh-500016

கறிவேப்பிலை

கறிவேப்பிலைபொதுவாக கறிவேப்பிலை உணவில் வாசனையை தர பயன்படுகிறது என்று தான் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் என்னவோ சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டுவிடுகிறோம். இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். ஏனென்றால் கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகளும் உள்ளன. இதனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது.

இத்தகைய குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை குறித்து ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலைக்கு புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர். மேலும் இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்றும் கூறுகின்றனர். கருவேப்பிலை சாப்பிடுவதால் இதய நோய் வராது, மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் நன்மை உண்டா? என்று திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக்கழகத்தில் மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ. பாதித்து செல்களிலுள்ள புரோட்டின் அழிந்து, அதன் விளைவாக புற்றுநோய், வாதநோய்கள் வருகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

இது தவிர நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவு பாதியாக குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

ஆமணக்கின் மருத்துவ குணங்கள்

ஆமணக்கின் மருத்துவ குணங்கள்ஆமணக்குச் செடியின் வேரை குடிநீரில் சேர்ப்பது வழக்கமாகும். அது போலவே, பல்வேறு விதமான தைலங்களிலும் இந்த வேரைச் சேர்ப்பார்கள். 

சளித் தொல்லை, ஜலதோஷம் நீங்கவும், காலை, மாலை இரு வேளைகளிலும் சிறிது அளவில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்குக் கொடுத்து வர, சளித்தொல்லை குணமாகும்.

ஆமணக்கு இலை, விதை மற்றும் எண்ணெயின் மருத்துவ குணங்கள் இதன் இலைகளைச் சாறு பிழிந்து, கொடுத்து வந்தாலும் இந்த இலைகளை 

அரைத்து மார்பின் மீது கட்டி வந்தாலும் பால் சுரக்க ஆரம்பிக்கிறது. இலைகளை நறுக்கி, அதில் சிற்றாமணக்கு நெய் விட்டு வதங்கிச் சூட்டுடன் வலியுடன் கூடிய கீழ்வாய்வுகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒத்தடம் இடலாம்.

இதன் இலைகளை, கீழாநெல்லி இலைகளுடன் சேர்த்து அரைத்து சிறு எலுமிச்சம்பழ அளவில் எடுத்து மூன்று நாட்களுக்கு காலை நேரத்தில் தொடர்ந்து கொடுத்து வருவதுடன், நான்காவது நாள் மூன்று முறை சிறிதளவு சிவதைப் பொடி கொடுத்து வந்தால் காமாலை நோய் தீர்ந்துவிடும்.

சிற்றாமணக்கு எண்ணெய் அடி வயிற்றின் மீது பூசி, அதன் மேல் இந்த இலைகளை வதக்கிப் போட்டால் மலச்சிக்கல், வயிற்றுவலி குணம் பெறும். 

இதன் இலைகளைப் பொடியாய் அரைத்து, அதில் ஆமணக்கு நெய்விட்டு வதக்கி ஒத்தடம் கொடுப்பதால் மூலக்கடுப்பு, கீழ்வாதம், வாத வீக்கம் குணம்பெறும்.

ஆமணக்குச் செடியின் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கி தொப்புளில் வைத்துக்  கட்டினால் மூலம், வயிற்று வலி குணம்பெறும். சிறுநீர்ப்பை வலிகளுக்கு ஆமணக்கு இலைகள் உதவுகின்றன.

ஆமணக்கு விதைகளைப் பாலில் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து மூட்டுவலி, பின்தொடை, நரம்பு வலிகளுக்கு மருந்தாகத் தரலாம். சொட்டு, சொட்டாக சிறுநீர் கழியும் போக்கிற்கு சிவப்பு வகை ஆமணக்குச் செடியின் மலர்கள் பயன்படுகின்றன. மேலும், இதன் விதைகள் கல்லீரல் நோய்கள், மண்ணீரல் நோய்களையும் குணப்படுத்துகின்றது.

Wednesday, 25 March 2015

Tuesday, 24 March 2015

Wednesday, 18 March 2015

Friday, 13 March 2015

வயிறு பிரச்சினையா?

நம் உடம்பில்வயிறு பிரச்சினையா? உள்ள கழிவுகள் வெளியேறினால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பெரியவர்களுக்கு மலச்சிக்கல் என்றால் அதற்கேற்ப ஏதாவது மருந்து மாத்திரை சாப்பிட்டு அதை சரி செய்து விடுவோம். ஆனால் சின்னக்குழந்தைகளுக்கு மலச்சிக்கல் என்றால் எதையுமே சாப்பிடாது. உம் என்று ஒரு ஓரத்தில் உட்கார்ந்திருப்பார்கள். சமயத்தில் சில குழந்தைகள் வாந்தி கூட எடுப்பார்கள். அவர்களுக்கு சில பாட்டி வைத்திய முறைகளை செய்தால் சட்டென்று சரியாகிவிடும்.

 விளக்கெண்ணெய் வைத்தியம்
மலம் வெளியேராத குழந்தைகளுக்கு இளம் சூடான நீரை அடிக்கடி கொடுக்கவும் இதனால் வயிற்றில் மலம் இறுகிப் போயிருந்தாலும் இளக்கம் கொடுக்கும். விளக்கெண்ணையை எடுத்து வயிற்றில் சர்குலர் மூமெண்ட்டில் தடவி விடவும் ஆட்டோமேட்டிக் ஆக ஒரு ரிலீஃப் கிடைக்கும்.

சுக்கு டீ, காபி குடிக்கும் பிள்ளைக‌ளாக‌ இருந்தால் பாலில் காபி பொடி க‌ல‌ந்து சுக்கு சோம்பு த‌ண்ணீருட‌ன் க‌ல‌ந்து கொடுக்க‌வும்.

ஒரு தேக்க‌ர‌ண்டி சோம்பை க‌ருகாம‌ல் வ‌றுத்து அத்துட‌ன் சிறிது சுக்கு சேர்த்து ஒரு ட‌ம்ள‌ர் த‌ண்ணீரில் கொதிக்க‌வைத்து அரை ட‌ம்ள‌ராக‌ வ‌ற்ற‌விட்டு அதில் பால் க‌ல‌ந்து ச‌ர்க்க‌ரை சேர்த்து கொடுக்க‌வும்.

வயிற்றுச் சிக்கலை தீர்ப்பதில் இஞ்சிக்கு நிகர் எதுவுமில்லை. குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமல், மலச்சிக்கல் ஏதேனும் ஏற்பட்டால் இஞ்சி மிட்டாய் உண்ணத் தரலாம். இது வயிற்றுப் பிரச்சினையை சரியாக்கும்.

ஆலிவ் எலுமிச்சை
வாயில் உமிழ்நீர் சுரப்பது குறைந்து உலர்ந்து போனாலும் மலச்சிக்கல் ஏற்படும். எனவே எலுமிச்சையானது மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்கக் கூடியது. எனவே பயணம் செல்லும் போது .கூட எலுமிச்சையை எடுத்துச் செல்லுங்கள். அவ்வப்போது நறுக்கி ஜூஸ் செய்து பருக தரலாம். இதனால் உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கும்.

மணிக்கட்டில் அழுத்தம்
இது அக்கு பிரசர் முறையோடு ஒத்தது. மலச்சிக்கல் பிரச்சினை உள்ள குழந்தைக்களின் மணிக்கட்டில் உள்பகுதியில் நன்றாக அழுத்தம் கொடுக்கவும். இதனால் வயிற்றில் இளக்கம் கொடுக்கும் சிக்கல் தீரும். ஒவராக பயணம் செய்தாலும் மலச்சிக்கல் ஏற்படும். எனவே நன்றாக ஓய்வெடுக்க விடவேண்டும். இதனால் குழந்தைகளின் மலச்சிக்கல் தீரும்.

ரசம் சாதம் கரைசல்
கெட்டியான உணவை தவிர்க்கவும். ரசம் சாதம் குழைவாக, பருப்பு கீரை கடைசல், வெள்ளை வாயு கஞ்சி போன்றவை கொடுத்தால் ரிலீஃப் ஆகும். அப்படியும் பிரச்சினை தீரவில்லை என்றால் அத்தி பழம் கொடுக்கலாம், சாப்பிடாத குழந்தைகளுக்கு அல்வா பதத்தில் கிளறி கொடுக்கவும். மலச்சிக்கல் பிரச்சினை தீரும்.

Thursday, 12 March 2015

Aster Healthcare Limited

Kuttisahib Road, Near Kothad Bridge, South Chittoor (P O) Cochin Kerala-682027

Sunday, 8 March 2015

நந்தியா வட்டை

நந்தியா வட்டைநந்தியா வட்டை பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் வீட்டின் முன்பகுதியில் அதன் மருத்துவ குணம் தெரியாமல் பலரும் இதை வளர்த்து வருகின்றனர். பசுமையாய் கண்களுக்கு குளிர்ச்சியைத்தரும் இந்தச் செடி சுமார் 1.8 - 2.4 மீட்டர் உயரம் வளரும். இலையை காம்புடன் கிள்ளினால் பால் வரும். பூக்கள் வெண்மை நிறத்துடன், வாசனையுடன் கூடியவை. தோட்டங்களிலும், வேலியோரமாகவும் வளர்க்கப்படும் நந்தியா வட்டை பல்வேறு மருத்துவபயன்களை கொண்டுள்ளது. இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய் போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

நந்தியார்வட்டைச் செடி இருவகைகளில் காணப்படுகின்றன. இருவகையும் பித்த சூட்டைக் குறைக்கும் தன்மையுடையவை. புண்களை சுத்தப்படுத்தி ஆற வைக்கும். பூக்களை இரவில் கண்களில் கட்டி, மறு நாள்காலை எடுத்து விடுதலின் கண்கள் குளிர்ச்சியடைகின்றன. பூக்களை சுத்தமான தண்ணீரில் இடித்து சாறு பிழிந்து கண்களில் விடுவதால் கண்நோய்கள் நீங்கி கண்பார்வையும் நன்றாக இருக்கும்.இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும். 

அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள், அதிக அளவில் காணப்படுகின்றன. சிட்ரிக், ஒலியிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு அமிலம். இலைகளின் பால் சாறு காயங்களின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும். கண்நோய்களிலும் உதவுகிறது. நந்தியா வட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். கண் நோய் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். வேர்ப்பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. வேர் கசப்பானது. பல்வலி போக்கும். வலிநீக்குவி, கட்டை குளுமை தருவது. வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும்.

நந்தியாவட்டப் பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் உறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டி வரப் பூ, சதைவளர்ச்சி, பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.

நந்தியா வட்டைப்பூவும் தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாகக் கசக்கிக் கண்களில் இரண்டொரு துளிகள் தொடர்ந்து விட்டுக் வந்தால் சில தினத்தில் கண்களில் காணும் பூ நீங்கும். மலர்களின் சாறு எண்ணெய் கலந்து பயன்படுத்தும் போது எரிச்சல் உணர்வை மட்டுப்படுத்தும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன்படுகின்றது. இது நிறத்திற்கும் பயன்படுகிறது. 

இதிலிருந்து அழியாத மை தயார் செய்கிறார்கள். இந்த பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் ஊறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டு வந்தால் பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.

ஐஸ்கிரீம்!!!

ஐஸ்கிரீம்!!!ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காத ஆட்களே இல்லை இருக்க மாட்டார்கள். ஆனால் பிடிக்கும் என்று அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கும். ஆகவே  கட்டுப்பாட்டோடு அதை சாப்பிட வேண்டும். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விடமாட்டார்கள். இதற்கு காரணம், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் பல் சொத்தையாகிவிடும் அல்லது சளி பிடிக்கும் என்பதால். நல்லது தான், ஆனால் ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.

1. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. எப்படியென்றால் ஐஸ்கிரீமை பால் கொண்டு செய்வதால் தான். இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைவதோடு, உடலுக்கு சக்தியையும் தருகிறது.

2. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் அது பற்களை பாதுகாப்பதுடன், ஈறுகளும் நன்கு வலுவடைகிறது.

3. சாக்லேட் ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் சிறந்தது. பொதுவாக சாக்லேட் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது. அதிலும் சாக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் சரியாகிவிடும்.

4. ஒரு கரண்டி ஐஸ்கிரீமில் வைட்டமின் ஏ, டி, கே மற்றும் பி12 ஆகியவை உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் பார்வைக் கோளாறு, சிறுநீரக கோளாறு போன்றவை சரியாகும். மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதிலுள்ள வைட்டமின் பி12 நினைவு ஆற்றலை அதிகப்படுத்தும்.

5. ஐஸ்கிரீமில் உடலுக்கு தேவையான புரோட்டீன் இருக்கிறது. இதனால் உடலுக்கு தினமும் தேவை, ஏனென்றால் உடலில் உள்ள தசைத் திசுவை தினமும் சரிசெய்ய தேவைப்படுகிறது.

6. சில ஐஸ்கிரீமானது கொழுப்பு குறைவாக உள்ள பாலாடையால் ஆனது. இப்படிப்பட்ட ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

ஆகவே ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று புரிந்து கொண்டீர்களா!!! ஐஸ்கிரீமை சாப்பிடலாம், ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். தினமும் சாப்பிட முடியவில்லை என்றாலும், வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங்கள். இதனால் உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.

ஐஸ்கிரீம்!!!

ஐஸ்கிரீம்!!!ஐஸ்கிரீம் என்றால் பிடிக்காத ஆட்களே இல்லை இருக்க மாட்டார்கள். ஆனால் பிடிக்கும் என்று அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை தான் அதிகரிக்கும். ஆகவே  கட்டுப்பாட்டோடு அதை சாப்பிட வேண்டும். சில தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அதிகமாக ஐஸ்கிரீம் சாப்பிட விடமாட்டார்கள். இதற்கு காரணம், ஐஸ்கிரீம் சாப்பிட்டால் பல் சொத்தையாகிவிடும் அல்லது சளி பிடிக்கும் என்பதால். நல்லது தான், ஆனால் ஐஸ்கிரீமை சாப்பிட்டால் பல நன்மைகளும் இருக்கிறது.

1. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகமாக இருக்கிறது. எப்படியென்றால் ஐஸ்கிரீமை பால் கொண்டு செய்வதால் தான். இதை சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடைவதோடு, உடலுக்கு சக்தியையும் தருகிறது.

2. ஐஸ்கிரீமில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பதால் அது பற்களை பாதுகாப்பதுடன், ஈறுகளும் நன்கு வலுவடைகிறது.

3. சாக்லேட் ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் சிறந்தது. பொதுவாக சாக்லேட் சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது. அதிலும் சாக்லேட் ஐஸ்கிரீம் சாப்பிட்டால் இதயத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலும் சரியாகிவிடும்.

4. ஒரு கரண்டி ஐஸ்கிரீமில் வைட்டமின் ஏ, டி, கே மற்றும் பி12 ஆகியவை உள்ளது. ஆகவே இதை சாப்பிட்டால் பார்வைக் கோளாறு, சிறுநீரக கோளாறு போன்றவை சரியாகும். மேலும் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதிலுள்ள வைட்டமின் பி12 நினைவு ஆற்றலை அதிகப்படுத்தும்.

5. ஐஸ்கிரீமில் உடலுக்கு தேவையான புரோட்டீன் இருக்கிறது. இதனால் உடலுக்கு தினமும் தேவை, ஏனென்றால் உடலில் உள்ள தசைத் திசுவை தினமும் சரிசெய்ய தேவைப்படுகிறது.

6. சில ஐஸ்கிரீமானது கொழுப்பு குறைவாக உள்ள பாலாடையால் ஆனது. இப்படிப்பட்ட ஐஸ்கிரீம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

ஆகவே ஐஸ்கிரீம் சாப்பிட்டால் உடலுக்கு எவ்வளவு நல்லது என்று புரிந்து கொண்டீர்களா!!! ஐஸ்கிரீமை சாப்பிடலாம், ஆனால் அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம். தினமும் சாப்பிட முடியவில்லை என்றாலும், வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிடுங்கள். இதனால் உடலானது ஆரோக்கியமாக இருக்கும்.

Friday, 6 March 2015

Radiant Health Care Pvt Ltd

No.303, 7th B Cross, Kaveriappa Industrial Area, BTM Layout 2nd Stage Bangalore Karnataka-560076